Tuesday, December 14, 2010

இணையத்தில் பயன்படக்கூடிய தளங்கள்

இணையத்தில் ஏராளமான பயன்படக்கூடிய தளங்கள் இருந்தாலும் இலவசமானதும்,சிக்கல் அற்ற இலகுவானதுமான தளங்களை காண்பது மிக கடினம்.நிங்கள் சிலவேளைகளில் அறிந்திருக்காத அனால் அறிந்து இருக்கவேண்டிய ஒனபது தளங்கள் (Web Applications) களை கீழே பார்ப்போம்.

1 . http://www.printwhatyoulike.com
 
நீங்கள் சில வலைப்பக்கங்களை பிரிண்ட் எடுக்க வேண்டி வரும். அப்படியான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தேவையான விடயங்கள் மட்டு மன்றி உங்களுக்கு தேவையற்ற அப்பக்கத்தில் உள்ள விளம்பரங்கள், வெற்று இடம் என்பனவும் பிரிண்ட் ஆகும்.ஆனால் சில செக்கன் களில் உங்களுக்கு வேண்டியதை மட்டும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொள்ள ஏற்றவாறு அந்த பக்கத்தை மாற்றி உங்களுக்கு இந்த தளம் உதவி செய்யும்.

2 . 
http://www.alertful.com
 
உங்களுக்கு வேண்டிய ஒன்றை நினைவூட்ட வேண்டுமா?உதாரணமாக ஒருவரின் பிறந்த நாள்.நீங்கள் செய்ய வேண்டியது இது தான். இந்த தளத்துக்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய விபரத்தையும் வழங்கினீர்கள் என்றால் அது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எப்போது உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டுமோ அந்த நேரம் நினைவூட்டலை வழங்கும்

3 . 
http://www.pdfunlock.com
 
சில PDF files களை நீங்கள் பார்த்தால் சில கட்டுப்பாடுகள் கொண்டதாக இருக்கும்.உதாரணமாக கொப்பி, பிரிண்ட், எடிட் பண்ண முடியாதிருக்கும் .கவலையை விடுங்கள் இந்த தளத்துக்கு சென்று குறித்த PDF file ஐ கொடுத்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் உடைத்து உங்களுக்கு விரும் பியவாறு அதாவது உங்கள் கோப்பு போன்று எப்படி வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.

4 . 
http://www.daileez.com
 
இது ஒரு நினைவுக்குறிப்பு போன்றது.அதாவது இன்றைய நாள் முடிவில் நீங்கள் செய்ததை டயரி இல் எழுதுவீர்கள். அதை ஒரு ஒரு சின்னமாக அதாவது Icon ஆக காட்டினால் எப்படி இருக்கும். இத்தளம் மூலம் அதை நீங்கள் செய்து கொள்ள முடியும்.உங்கள் செயலை நீங்கள் எழுத நினைப் பதை  காட்டக்கூடிய அந்த Icon இக்கு விரும்பினால் ஒரு சிறிய விளக் கத்தையும் சேர்த்துக்கொள்ள  முடியும்

5 . 
http://isitraining.in

 

இந்த கணம் ஒரு குறிப்பிட்ட நகரம்(பெரிய) ஒன்றில் மழை பெய்கிறதா என நீங்கள் கண்டு பிடிக்க வேண்டுமா.இந்த தளத்துக்கு சென்று அந்நகரத்தின் பெயரை வழங்கினால் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல நீங்கள் வழங்கிய நகரத்தின் இக்கண weather conditions களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த தளம்  உலக வானிலை அறிக்கையே உங்கள்  காலடியில் கொண்டு வந்து சேர்க்கும்.

6 .  http://www.typingweb.com
 
இது ஒரு ஆன்லைன் தட்டச்சு பயிற்சி வழங்கும் இலவச தளமாகும். பலவகை திறன் மட்டங்களை கொண்டவர்களுக்கும் வெவ்வேறு மட்டங் களில் பயற்சி வழங்கக்கூடிய தளமாக இது அமைந்தது உள்ளது.இன்றைய யுகத்தில் விரைவான டைப்பிங் திறமையும் பல வேலைவாய்ப்புகளை தீர்மானிக்கும் ஒரு தகுதியாக இருப்பதால் இத்தளம் நிச்சயம் அப்படிபட்ட வர்களுக்கு ஒரு நல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது.

7 .  http://www.gedoo.com
 
இந்த தளம் ஒரு தேடல் தளமாக அதாவது கூகுல் போன்று உங்களுக்கு விரும்பிய ஒன்றை பற்றி தேடு தளமாக உள்ளது.நீங்கள் ஒன்றை பற்றி தேடினால் அது தானாக கூகுல் இல்ருந்து தேடி தரும். ஆனால் நிங்கள் 4300 தேடு தளங்களில் ஒன்றை தெரிவு செய்து அதிலிருந்து தேடி தருமாறு செய்யலாம்.இந்த தளம் 4300 தேடு தளங்களில் உங்களுக்கு பிடித்ததில் தேடி தரும். அதவாது புரோக்கர் போல.ஹிஹிஹி

8 .  http://www.cvmaker.in
 
வேலை ஒன்றுக்கு அப்ளை பண்ணும் பொது தரமான Cv ஒன்றை ரெடி பண்ணுவது மிக முக்கியம்.எல்லா தகவல்கள் தகமைகள் இருந்தும் அதை எப்படி வடிவமைப்பது என மூளையை கசக்கி பிழிந்து கொண்டு இருப் பீர்கள்.இக்கவலை போக்க இத்தளம் உதவி செய்கிறது.சில நிமிடங்களில் ஒரு அழகான professional ஆன Cv ஐ ரெடி பண்ணி கையில் தரும்.

9 .  http://www.zoom.it
 
இணையதளங்களில் உள்ள சில படங்கள் குறிப்பாக google search   படங்களின் URL இனை இந்த தளத்துக்கு வழங்கினால் நீங்கள் வழங்கிய படத்தை மிக மிக தரமான ஒரு படமாக மாற்றி தரும்.அது மட்டுமல்ல மாற்றப்பட்ட படத்துக்குரிய ஒரு url முகவரியையும் தரும் . நீங்கள் அதை பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே ஒரு சாதாரணமான படத்தை மாறுப்பட்ட ஒரு அனுபவத்தை தரும் படமாக மாற்றும்.

தடை செய்யப்பட்ட இணையதளங்களில் உங்கள் கைவரிசையை காட்ட

நாம் அதிகம் இணையதளம் பாவிக்கும் இடங்களான அலுவலகம், பாடசாலை, பல்கலைக்கழகம் என்பவற்றில் பல எமக்கு பிடித்த இணையதளங்கள் குறிப்பாக Facebook .com, blogspot .com என்பன Network Administrator ஆல் தடை செய்யப் பட்டிருக்கும். இந்த கட்டுப்பாடுகளை உடைத்து எப்படி உங்களுக்கு பிடித்த தடைசெய்யப்பட்ட தளங்களுக்கு செலவது என்பதற்கான 7 முறைகள். இவற்றில் சில சமயம் குறிப்பிட்ட ஒரு முறை பயனளிக்காத பட்சத்தில் மற்றைய முறையை கையாளலாம்.

குறிப்பு :- இந்த முறைகளை தடை செய்யப்பட்ட சட்டவிரோத இணைய தளங்களுக்கு செல்வதற்கு பயன்படுத்தல் கூடாது.

1 .URL இக்கு பதிலாக IP address ஐ பயன்படுத்தல்

ஒவ்வொரு இணையதளமும் தனது URL அதாவது Domain name இற்கு சமமான IP address ஐ கொண்டிருக்கும். உதாரணமாக facebook http://www.facebook.com என்ற URL இற்கு சமமாக 69.63.189.11 என்ற IP address ஐ கொண்டுள்ளது.இது போல் உங்களுக்கு தேவையான மற்ற இணைய தளங்களின் IP address ஐ கண்டு பிடிக்க http://www.ip-adress.com/reverse_ip என்ற தளம் பயனுள்ளதாக இருக்கும்.


2 .Google Cache ஐ பயன்படுத்தல்

நீங்கள் Google போன்ற search engines களை பயன்படுத்தி குறித்த இணையதளத்தை தேடும் பொது தேடல் முடிவுகள் கிடைக்கும்.அந்த குறிப்பிட உங்களுக்கு தேவையான search result இன் கீழ் பார்த்தீர்கள் என்றால் "Cache " என்ற ஒரு சொல் (லிங்க்) இருக்கும் அதனை நீங்கள் அழுத்தும் பொது உங்களுக்கு தேவையான குறித்த தடை செய்யப்பட்ட இணைய தளத்துக்கு செல்ல முடியும்.


3 .e -mail இல் பெறுதல்

web2mail என்ற ஒரு இலவச சேவை வழங்கும் தளம் ஒன்று உள்ளது. நீங்கள் இந்த தளத்தின் மின்னஞ்சல் முகவரியான www@web2mail.com இக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் subject title ஆக உங்களுக்கு தேவையான தளத்தின் URLஐ இட்டு.இது நீங்கள் அனுப்பிய தள முகவரியின் web page இனை உங்கள் மினஞ்சல் Inbox இற் கு அனுப்பி வைக்கும்.


4 .Proxy Websites இனை பயன்படுத்தல்

இது தான் பலரால் பயன்படுத்தப்படும் பிரபல முறை.இப்படியான தளங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.இத்தளங்களுக்கு சென்று தடை செய்யப்பட்ட உங்களுக்கு வேண்டிய இணையதள முகவரியை கொடுத்தால் குறித்த தளத்துக்கு செல்ல கூடியதாக இருக்கும். மிக பிரபலமான இப்படியான சேவை வழங்கும் ஒரு தளம் http://www.hidemyass.com ஆகும்.


5 .Short URL முறையை கையாளல்

பெரிய URL களை சுருக்கி தரும் சேவையை வழங்கும் சில தளங்கள் உள்ளன. இப்படியான ஒரு தளத்துக்கு சென்று உங்களுக்கு தேவையான முகவரியை வழங்கி சுருக்கப்பட்ட முகவரியை பெற்று அதற்கு செல்வதன் மூலம் தடை செய்யப்பட்ட தளத்துக்கு செல்ல முடியும்.இப்படியான URL சுருக்கல் சேவை வழங்கும் பிரபல தளம் http://bit.ly இனை நீங்கள் பாவிக்கலாம்.


6 .Screen-Resolution.com

இந்த தளம் different resolution இல் உள்ள எந்த தளத்தையும் பார்வையிட உதவு கின்றது. அதுமட்டுமல்லாமல் மிகவும் சுவாரசியமான பயனுள்ள ஒரு தளம். இங்கு சென்றால் தடை செய்யப்பட்ட இணையதளங்களுக்கு நீங்கள் செல்ல உதவும்.


7 .Google Mobile Search

http://www.google.com/gwt/n என்ற இந்த தளம் குறித்த ஒரு இணைய தளத்தை செல் போன் இல் பார்த்தால் எப்படி இருக்கும் என பார்க்க உதவும் ஒரு தளமாகும். இத்தளத்துக்கு சென்றும் நீங்கள் தடை செய்யப்பட்ட இணையதளங்களுக்கு நீங்கள் போகலாம்.

Friday, December 3, 2010

AMAZING and MIND BLOWING FACTS

1. Turtles have no teeth.

2. Prehistoric turtles may have weighed as much as 5,000 pounds.

3. Only one out of a thousand baby sea turtles survives after hatching.

4. Sea turtles absorb a lot of salt from the sea water in which they live. They excrete excess salt from their eyes, so it often looks as though they're crying.

5. Helium is a colourless, odourless, tasteless inert gas at room temperature and makes up about 0.0005% of the air we breathe.

6. Helium Balloon Gas makes balloons float. Helium is lighter than air and just as the heaviest things will tend to fall to the bottom, the lightest things will rise to the top.

7. Helium Balloon Gas makes balloons float. Helium is lighter than air and just as the heaviest things will tend to fall to the bottom, the lightest things will rise to the top.

8. Camels can spit.

9. An ostrich can run 43 miles per hour (70 kilometers per hour).

10. Pigs are the fourth most intelligent animal in the world.

11. Dinosaurs didn’t eat grass? There was no grass in the days of the dinosaurs.

12. Dolphins can swim 37 miles per hour (60 kilometers per hour).

13. A crocodile’s tongue is attached to the roof of its mouth? It cannot move. It cannot chew but its Digestive juices are so strong that it can digest a steel nail, Glass pieces, etc

14. Sharks are immune to disease i.e they do not suffer from any Disease.

15. Animals are either right- or left-handed? Polar bears are always left-handed, and so is Kermit the Frog.

16. Paris, France has more dogs than people.

17. New Zealand is home to 70 million sheep and only 40 million people.

18. Male polar bears weigh 1400 pounds and females only weight 550 pounds, on average.

19. Bison are excellent swimmers? Their head, hump and tail never go below the surface of the water.

20. There are 6 to 14 frogs species in the world that have no tongues. One of these is the African dwarf frog.

21. A frog named Santjie, who was in a frog derby in South Africa jumped 33 feet 5.5 inches.

22. The longest life span of a frog was 40 years

23. The eyes of a frog flatten down when it swallows its prey

24. The name `India’ is derived from the River Indus

25. The Persian invaders converted it into Hindu. The name `Hindustan’ combines Sindhu and Hindu and thus refers to the land of the Hindus.

26. Chess was invented in India.

27. The' place value system' and the 'decimal system' were developed in 100 BC in India.

28. The game of snakes & ladders was created by the 13th century poet saint Gyandev. It was originally called 'Mokshapat.' The ladders in the game represented virtues and the snakes indicated vices.

29. India has the most post offices in the world

30. 'Navigation' is derived from the Sanskrit word NAVGATIH

31. The word navy is also derived from the Sanskrit word 'Nou'.

32. Until 1896, India was the only source for diamonds to the world

33. The' place value system' and the 'decimal system' were developed in 100 BC in India.

34. A snail can sleep for 3 years.

35. The names of the continents all end with the same letter with which they start

36. Twenty-Four-Karat Gold is not pure gold since there is a small amount of copper in it. Absolutely pure gold is so soft that it can be molded with the hands.

37. Electricity doesn't move through a wire but through a field around the wire.

38. The first bicycle that was made in 1817 by Baron von Drais didn't have any pedals? People walked it along

39. The first steam powered train was invented by Robert Stephenson. It was called the Rocket.

40. A cheetah does not roar like a lion - it purrs like a cat (meow).

41. The original name for the butterfly was 'flutterby'

42. An ostrich's eye is bigger than its brain.

43. Ants don't sleep.

44. Dolphins usually live up to about twenty years, but have been known to live for about forty.

45. Dolphins sleep in a semi-alert state by resting one side of their brain at a time

46. A dolphin can hold its breath for 5 to 8 minutes at a time

47. Bats can detect warmth of an animal from about 16 cm away using its "nose-leaf".

48. Bats can also find food up to 18 ft. away and get information about the type of insect using their sense of echolocation.

49. The eyes of the chameleon can move independently & can see in two different directions at the same time.

50. Cockroach: Can detect movement as small as 2,000 times the diameter of a hydrogen atom.

51. Dragonfly: Eye contains 30,000 lenses.

52. Pig’s Tongue contains 15,000 taste buds. For comparison, the human tongue has 9,000 taste buds.

53. The number system was invented by India. Aryabhatta was the scientist who invented the digit zero.

54. Intelligent people have more zinc and copper in their
hair.

55. Earth weighs 5,972,000,000,000,000,000,000 tons

56. Like fingerprints, everyone's tongue print is different.

57. A duck's quack doesn't echo anywhere

58. Man is the only animal who'll eat with an enemy

59. The average woman uses about her height in lipstick
every five years.

60. The first Christmas was celebrated on December 25,

61. AD 336 in Rome.

62. A Cockroach will live nine days without its
head, before it starves to death.

63. A chimpanzee can learn to recognize itself in a mirror, but monkeys can't


64. A rat can last longer without water than a camel can
65. About 10% of the world's population is left-handed

66. Dolphins sleep with one eye open

67. Snakes have no external ears. Therefore, they do not hear the music of a "snake charmer". Instead, they are probably responding to the movements of the snake charmer and the flute. However, sound waves may travel through bones in their heads to the middle ear.

68. Many spiders have eight eyes.

69. The tongue of snakes has no taste buds. Instead, the tongue is used to bring smells and tastes into the mouth. Smells and tastes are then detected in two pits, called "Jacobson's organs", on the roof of their mouths. Receptors in the pits then transmit smell and taste information to the brain.

70. Birds don't sweat

71. The highest kangaroo leap recorded is 10 ft and the longest is 42 ft

72. Flamingo tongues were eaten common at Roman feasts

73. The smallest bird in the world is the Hummingbird. It weighs 1oz

74. The bird that can fly the fastest is called a White it can fly up to 95 miles per hour.

75. The oldest living thing on earth is 12,000 years old. It is the flowering shrubs called creosote bushes in the Mojave Desert

76. Tea is said to have been discovered in 2737 BC by a Chinese emperor when some tea leaves accidentally blew into a pot of boiling water.

77. A person can live without food for about a month, but only about a week without water.
If the amount of water in your body is reduced by just 1%, you'll feel thirsty.
If it's reduced by 10%, you'll die.

78. Along with its length neck, the giraffe has a very long tongue -- more than a foot and a half long. A giraffe can clean its ears with its 21-inch tongue

79. Ostriches can kick with tremendous force, but only forward. Don't Mess with them

80. An elephant can smell water three miles away

81. If you were to remove your skin, it would weigh as much as 5 pounds

82. A hippopotamus can run faster than a man

83. India never invaded any country in her last 10000 years of history

84. The world's known tallest man is Robert Pershing Wadlow. The giraffe is 5.49m (18 ft.), the man is 2.55m (8ft. 11.1 in.).

85. The world's tallest woman is Sandy Allen. She is 2.35m (7 ft. 7 in.).

86. The only 2 animals that can see behind itself without turning its head are the rabbit and the parrot.

87. The blue whale is the largest animal on earth. The heart of a blue whale is as big as a car, and its tongue is as long as an elephant.

88. The largest bird egg in the world today is that of the ostrich. Ostrich eggs are from 6 to 8 inches long. Because of their size and the thickness of their shells, they take 40 minutes to hard-boil. The average adult male ostrich, the world's largest living bird, weighs up to 345 pounds.

89. Every dolphin has its own signature whistle to distinguish it from other dolphins, much like a human fingerprint

90. The world's largest mammal, the blue whale, weighs 50 tons i.e. 50000 Kg at birth. Fully grown, it weighs as much as 150 tons i.e. 150000 Kg.

91. 90 % of all the ice in the world in on Antarctica

92. Antarctica is DRIEST continent. Antarctica is a desert

93. Antarctica is COLDEST continent, averaging minus 76 degrees in the winter

94. Mercury is the closest planet to the sun and it doesn't have a moon. Its atmosphere is so thin that during the day the temperature reaches 750 degrees, but at night it gets down to -300 degrees.

95. Jupiter is the largest planet. If Jupiter were hollow, you could fit 1000 earths inside! It is made up of gas and is not solid. The most famous feature on Jupiter is its Red Spot, which is actually an enormous hurricane that has been raging on Jupiter for hundreds of years! Sixteen moons orbit Jupiter.

96. Saturn is a very windy place! Winds can reach up to 1,100 miles per hour. Saturn is also made of gas. If you could find an ocean large enough, it would float. This planet is famous for its beautiful rings, and has at least 18 moons.

97. Uranus is the third largest planet, and is also made of gas. It's tilted on its side and spins north-south rather than east-west. Uranus has 15 moons.

98. Neptune takes 165 Earth years to get around the sun. It appears blue because it is made of methane gas. Neptune also has a big Spot like Jupiter. Winds on Neptune get up to 1,200 mile per hour! Neptune has 8 moons.

99. Pluto is the farthest planet from the sun... usually. It has such an unusual orbit that it is occasionally closer to the sun than Neptune. Pluto is made of rock and ice.

100. Just about everyone listens to the radio! 99% of homes in the United States have a least one radio. Most families have several radios.

101. Sound is sent from the radio station through the air to your radio by means of electromagnetic waves. News, music, Bible teaching, baseball games, plays, advertisements- these sounds are all converted into electromagnetic waves (radio waves) before they reach your radio and your ears.

102. At the radio station, the announcer speaks into a microphone. The microphone changes the sound of his voice into an electrical signal. This signal is weak and can't travel very far, so it's sent to a transmitter. The transmitter mixes the signal with some strong radio signals called carrier waves. These waves are then sent out through a special antenna at the speed of light! They reach the antenna of your radio. Your antenna "catches" the signal, and the radio's amplifier strengthens the signal and sends it to the speakers. The speakers vibrate, and your ears pick up the vibrations and your brain translates them into the voice of the radio announcer back at the station. When you consider all the places the announcer's voice travels

103. Every radio station has its own frequency. When you turn the tuning knob on your radio, you are choosing which frequency you want your antenna to "catch."

104. Mountain lions are known by more than 100 names, including panther, catamount, cougar, painter and puma. It's scientific name is Felis concolor, which means "cat of one color." At one time, mountain lions were very common!

105. The large cats of the world are divided into two groups- those that roar, like tigers and African lions, and those that purr. Mountain lions purr, hiss, scream, and snarl, but they cannot roar.

106. They can jump a distance of 30 feet, and jump as high as 15 feet. It would take quite a fence to keep a mountain lion out!

107. Their favorite food is deer, but they'll eat other critters as well. They hunt alone, not in packs like wolves. They sneak up on their prey just like a house cat sneaks up on a bird or toy- one slow step at a time. A lion can eat ten pounds of meat at one time! That's equivalent to 40 quarter-pounder hamburgers!

108. Queen ants can live to be 30 years old

109. Dragonflies can flap their wings 28 times per second and they can fly up to 60 miles per hour

110. As fast as dragonflies can flap their wings, bees are even faster... they can flap their wings 435 times per second

111. Human thigh bones are stronger than concrete.

112. You can't kill yourself by holding your breath

113. Your heart beats over 100,000 times a day

114. Right handed people live, on average, nine years longer than left-handed people

115. The elephant is the only mammal that can't jump!

116. Fingernails grow nearly 4 times faster than toenails!

117. Women blink nearly twice as much as men

118. Honey is the only food that does not spoil. Honey found in the tombs of Egyptian pharaohs has been tasted by archaeologists and found edible

119. Coca-Cola would be green if colouring weren’t added to it.


120. More people are allergic to cow's milk than any other food.

121. Camels have three eyelids to protect themselves from blowing sand

122. Earth is the only planet not named after a god.

123. It's against the law to burp, or sneeze in a church in Nebraska, USA.

124. Some worms will eat themselves if they can't find any food!

125. It is impossible to sneeze with your eyes open

126. Queen Elizabeth I regarded herself as a paragon of cleanliness. She declared that she bathed once every three months, whether she needed it or not

127. Slugs have 4 noses.

128. Owls are the only birds who can see the colour blue.

129. Your tongue is the only muscle in your body that is attached at only one end

130. More than 1,000 different languages are spoken on the continent of Africa.

131. There was once an undersea post office in the Bahamas.

132. Abraham Lincoln's mother died when she drank the milk of a cow that grazed on poisonous snakeroot

133. After the death of Albert Einstein his brain was removed by a pathologist and put in a jar for future study.

134. Penguins are not found in the North Pole

135. A dentist invented the Electric Chair.

136. A whip makes a cracking sound because its tip moves faster than the speed of sound

137. Alexander Graham Bell's wife and mother were both deaf

138. Cockroaches break wind every 15 minutes.

139. Fish scales are an ingredient in most lipsticks

140. Canada" is an Indian word meaning "Big Village".

141. 259200 people die every day.

142. 11% of the world is left-handed

143. 1.7 litres of saliva is produced each day

144. The worlds oldest piece of chewing gum is 9000 years old!


145. The largest beetle in the Americas is the Hercules beetle, which can be 4 to 6 inches in length. That's bigger than your hand!

146. A full-grown male mountain lion may be 9 feet long, including his tail!

147. There are two kinds of radio stations: AM and FM. That's why there are two dials on your radio. AM is used mostly for stations that specialize in talking, such as Christian stations that have Bible stories and sermons; sports stations that broadcast live baseball and football games; and stations that specialize in news programs and "talk shows," where listeners call the station and discuss various topics. FM is used mostly for stations that specialize in music.


148. The average lead pencil can draw a line that is almost 35 miles long or you can write almost 50,000 words in English with just one pencil

149. The Wright Brothers invented one of the first airplanes. It was called the Kitty Hawk.

150. The worst industrial disaster in India, occurred in 1984 in Bhopal the capital of Madhya Pradesh. A deadly chemical, methly isocyanate leaked out of the Union Carbide factory killing more than 2500 and leaving thousands sick. In fact the effects of this gas tragedy is being felt even today.


151. Mars is nicknamed the "Red Planet," because it looks reddish in the night sky. Mars has 2 moons.

152. Venus is nicknamed the "Jewel of the Sky." Because of the greenhouse effect, it is hotter than Mercury, even though it's not as close to the sun. Venus does not have a moon but it does have clouds of sulfuric acid! If you're gonna visit Venus, pack your gas mask!

153. Tens of thousands of participants come from all over the world, fight in a harmless battle where more than one hundred metric tons of over-ripe tomatoes are thrown in the streets.

Animal General Knowledge Facts 2

* Sloth is a strange animal which spends its entire life hanging upside down from the branches of the trees.
* Cheetah is the fastest running animal.
* The eyes of a giant squid are very strange. They measure 40 cm across. These creatures live in dark and gloomy conditions, that is why, they have big eyes to see clearly in poor visible conditions.
* Sea horse has strange eyes, by which it can focus in two different directions at the same time.
* Whale shark measures 18 metre. It is the world's biggest fish.
* Porpoise is so intelligent sea animal that it can copy many actions of humans. It can imitate the voice of a man and even laugh.
* Musk is obtained from the gland of an animal called musk deer.
* Cuttle fish has three hearts.
* Cow has four stomachs.
* Lemmings are strange animals. When their number in an area increases beyond a certain limit, they jump into the sea and commit suicide.
* Kangaroo rat can survive over its life without drinking water. It meets its requirements of water by eating the roots of some desert plants.
* Gastric frog of Australia gives birth to its young ones through its mouth.
* A butterfly has 12,000 eyes.
* Botfly can fly at the speed of 818 miles per hour, faster than a jet plane.
* Dolphines sleep with one of its eyes open.
* If gold fish is left in a dark room for a long time, it turns white.
* An earthworm can pull ten times its own weight.
* A silkworm has eleven brains.
* The colour of milk of Himalayan yak is pink.
* Snails can sleep for 3 to 4 year's continuously.
* Some insects can live about a year after their heads have been separated.
* A small porcupine can kill a grown up lion.
* When a hippopotamus gets excited, its sweat becomes red.
* Pearl is made by a sea creature called oyster inside its body.
* A lizard can escape after leaving its tail behind. After sometime, the tail regenerates.
* The queen of the black garden ant feeds partly on its own wing muscles.
* Insect blood has no colour. If any insects has red blood, it will be the blood of another animal on which it is feeding.
* In a sandstorm a camel can close its nose.
* Electric eel can produce electricity, which is sufficient to light up ten bulbs. Its surface potential can measure up to 500 volts (D.C.) and is sufficient to kill any swimmer who touches it.

Animal General Knowledge Facts

Animal kingdom is very fascinating. There are so many interesting facts about animal world that common people are not aware of. Let’s share some of the interesting facts that you will be pleased to know.

Flutterby was the original name for butterfly.

The Earth has no less than over 12,00,000 species of animals, 3,00,000 species of plants & 1,00,000 other species.

The swan has over 25,000 feathers in its body.

A jellyfish is 95 percent water.

Only one bird can rotate its head to 270 degrees and that is owl.

All polar bears are left handed

Sticking out its tongue is not possible for crocodile.

A cow gives nearly 200,000 glasses of milk in her lifetime

Elephant teeth can weigh as much as 9 pounds.

A cheetah does not roar like a lion; instead it purrs like a cat (meow)

No two zebras have stripes that are exactly alike.

Crane sleeps standing on one leg.

There are more than 50 different kinds of kangaroos.

A butterfly has 6 Legs & 2 Pair of Wings & has 12,000 eyes.

The dangerous Sharks cannot see. In fact, they are very sensitive to sound.

Human birth control pill also works on gorillas.

Ants don’t sleep.

If there is one breed of dog that bites humans more than any other breed then it is German Shepherds.

A cat sees about six times better than a human at night because of the tapetum lucidum , a layer of extra reflecting cells which absorb light.

Grizzly bears are the ones whose brown fur is tipped with lighter-colored hairs.

Goliath frog is the largest frog in the world.

A cheetah can run 76 kilometres per hour (46 miles per hour)

Kiwis are the only birds, which hunt by sense of smell.

Thursday, November 18, 2010

வினோதமான வலைப்பூக்கள்


விளையாட
57 விதமான விளையாட்டுகளை கொண்டுள்ளது இந்த வலைத்தளம். ஒவ்வொரு விளையாட்டும் வெவ்வேறு விதமான லாஜிக்குகளைக் கொண்டது.
Orisinal வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.
மிகச் சிறிய வலைப்பூ
உலகிலேயே மிகச் சிறிய வலைப்பூ இது. ஒரு ஐகான் அளவே உள்ள இந்த வலைப்பூ, விளையாட்டை அடிப்படையாக கொண்டது.
guimp வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்
மிக நீளமான வலைப்பூ
18.939 கிலோ மீட்டர் அதாவது 11.77 மைல் நீளமான வலைப்பூ இது. உலகின் மிக நீளமான வலைப்பூ இது .
highest வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.
சொடுக்காமல்
இந்த வலைப்பூவில் எந்த காரணத்திற்காகவும் சொடுக்க கூடாது. இப்படி உங்கள் மௌசை பயன்படுத்தாமல் மெயில் கூட அனுப்ப முடியும் என்கின்றார்கள்.
dontclick வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.
வித்தியாசமான கூகுள் சர்ச்
இந்த தளம் விதவிதமான கூகுள் தேடுபொறிக்கான தீம்களை பெற்றுள்ளது. நமக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
இங்கு சொடுக்கவும்
சிறந்த தளங்களை கண்டறிய உதவும் தேடுபொறி
நீங்கள் கொடுக்கும் பிரிவில் சிறந்த பத்து தளங்களை வரிசைப் படுத்தி காட்டுகிறது.
இங்கு
அனிமேசன்
மிக அழகாக அனிமேசனுக்காக வடிவமைக்கப்பட்ட வலைப்பூ இது. இதன் நடுப்பகுதியில் ஓடிடும் உருவங்களை சொடுக்கிப் பாருங்கள். அதன் செய்கைகள் வினோதமாக இருக்கும்.
அனிமேசன் வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.
ஆன்லைன் மியூசியம்
மிக அரிய தளம் இது. உலகத்தில் இருக்கும் சிறந்த மியூசியங்களை இணையப்படுத்தி இருக்கின்றார்கள்.
coudal வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.
குடும்பம்
நமது குடும்பத்தினைப் பற்றியும் முற்கால சந்ததியினரைப் பற்றியும் வருங்கால சந்ததிகள் அறிந்து கொள்ள உதவும் தளம்.
familysearch வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்.
2000 நகைச்சுவைகள்
2000 நகைச்சுவை துணுக்குகளைக் கொண்ட வலைப்பூ இது.
jokes2000 வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்.
பணத்தினை மடிக்கும் கலை
பணத்தினை வைத்துக் கொண்டு பல பொருள்கள் வாங்கிருப்பீர்கள்.என்றாவது மடித்து பார்த்து வித விதமாய் உருவங்களை உருவாக்கியிருக்கீர்களா. இந்த தளத்தைப் பார்த்த பின்பு கண்டிப்பாக நீங்கள் செய்து பார்ப்பீர்கள்.
foldmoney வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.
Programmer or Killer?
இந்த இணையத்தில் காட்டப்படும் நபர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்கள் கொலைகாரர்களா மென்பொறியாளர்களா என கண்டுபிடிக்க வேண்டும். மிகவும் வினோதமான வலைப்பூ இது.
malevole வலைப்பூவிற்கு செல்ல இங்கு சொடுக்கவும்.
PhotoshopDisasters
புகைப்படங்களை விளையாட்டிற்காக மாற்றம் செய்து வெளியிட்டுள்ளார்கள். கொஞ்சம் கூர்மையாக நோக்கினால் அவர்கள் செய்துள்ள குறும்புகள் தெரியவரும்.
photoshopdisasters வலைப்பூவிர்கு செல்ல இங்கு சொடுக்கவும்.

எல்லா மொழியிலும் எழுதலாம் எல்லா மொழியையும் படிக்கலாம்


கூகுளின் டிரான்சிலேட் பற்றி அறிந்து கொண்டதும் வியப்பாக இருந்தது. இத்தனை நாட்கள் தவறவிட்டமையை எண்ணி வருத்தம் கொண்டேன். உங்களுக்கு புரியாமல் இருக்கும் மொழியை காப்பி செய்திடுங்கள். பின்பு translate.google.comக்கு சென்று அங்கு, காலியாக இருக்கும் பெட்டியில் பேஸ்ட் செய்திடுங்கள். உடனே அது எந்த மொழியென்றும் அந்த மொழிக்கான ஆங்கில அர்த்தத்தினையும் அருகிலேயே காணலாம்.
அது மட்டுமல்லாமல், ரஷ்யன், ஐப்பான், சீனா என அந்தந்த நாடுகளின் மொழிகளால் எழுதப்பட்ட வலைப்பூவையும் ஆங்கிலத்தில் படிக்க முடியும். அதற்கு அந்த வலைதளத்தின் முகவரியை காப்பி செய்து translate.google.comக்கு சென்று உள்ளீடு செய்து translate என்ற பட்டனை அழுத்த வேண்டும் அவ்வளவுதான். இனி எல்லா மொழியினையும் நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
ரஷ்ய மொழியில்...

அதே தளம் ஆங்கிலத்தில்...

எல்லா மொழியையும் படிப்பதனைப் பற்றி பார்த்துவிட்டோம். இனி எழுதுவது பற்றி,.
நம் வலைப்பூவினை பார்த்ததும் நிறைய நண்பர்கள் கேட்கும் கேள்வி எப்படி தமிழில் எழுதுவது என்பதுதான். தமிழ் தட்டச்சுக்கென இருக்கும் மென்பொருள்களை சிபாசு செய்தால், அதனை பயன்படுத்துவதற்குள் அவர்கள் தமிழையே வெறுத்துவிடுகின்றனர். தமிழ் தட்டச்சு பழகுவது மிகவும் சிரமாக இருக்கிறது என்று கூறி மீண்டும் ஆங்கிலத்திற்கே சென்று விடுகின்றனர்.
இன்று கைப்பேசியில் கூட தமிழ் வந்துவிட்டாலும் அதனை பயன்படுத்துபவர்கள் வெகு குறைவு. இதற்கெல்லாம் காரணம், எல்லோரும் தங்கிலிஸ் என்ற புதுமொழியில் பழகிவிட்டனர். அம்மா என்பதை amma என்று எழுதியே பழக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வழியிலேயே தமிழில் எழுத google.com/transliteratel உதவி செய்கிறது. இங்கு சென்று தங்கிலிஸில் ஆங்கிலத்தினை தட்டச்சு செய்தால், தமிழ் மொழி கிடைத்துவிடும். படத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள இடத்தில் தமிழுக்கு பதிலாக மலையாளம், இந்தி, தெலுங்கு என எல்லா மொழிகளையும் தட்டச்சு செய்ய இயலும் என்றாலும் அந்தந்த மொழிகளின் அடிப்படை அறிவும் தேவை.

கூகுள் நிறுவனம் இந்த எளிமையான தமிழ் எழுதியை மின்னஞ்சல், ஆர்குட் என்று எல்லாவற்றிலும் புகுத்திவிட்டது உங்களுக்கு தெரி்ந்திருக்கும். மென்பொருளாக தரவிரக்கம் செய்யும் வசதியையும் இப்போது கூகுள் தந்திருக்கிறது.
அதற்கு, இங்கு சென்று கீழிருக்கும் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல, தமிழினை தேர்வு செய்துகொள்ளுங்கள். அடுத்து டவுன்லோட் பட்டனை தட்டி இன்ஸ்டால் செய்தால் போதும். இனி எங்கும் எதிலும் எளிதான தமிழ் தான்.

தமிழில் Firefox


இணையதள உலாவியான Firefox தற்போது தமிழ் மொழியில் உலாவியை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக தாய்மொழி அறிவு மட்டும் பெற்றிருக்கும் பலருக்கும் பயன்படும் வகையில் எல்லா நிறுவனங்களும் மாநில மொழிகளை தங்கள் படைப்புகளுடன் வெளியிடத் தொடங்கிவிட்டார்கள்.
எங்கும் தமிழ் -
சமூக இணைப்பு தளங்களான பேஸ்புக், ஆர்குட், டிவிட்டர் என எல்லாம் தமிழுக்கு முக்கியத்துவம் கொடு்த்து மாறியிருக்கின்றன. நோக்கியா போன்ற கைப்பேசி நிறுவனங்கள் முன்பே தமிழை அறிமுகப்படுத்திவிட்டன.

இணைய உலாவி -
இப்போது இணைய உலாவியும் தமிழில் வந்துவிட்டது. கோப்பு, சேவையாக்கு, நோக்குக, வரலாறு, புத்தகக்குறிகள், கருவிகள், உதவி என டூல்பாரில் தமிழை காணும் போது மகிழ்வாக இருக்கிறது. தமிழ் இனி மெல்ல சாகும் என வருத்தம் கொண்ட கவி இல்லையே, இருந்திருந்தால் பாடல் திருத்தப்பட்டிருக்கும்.

அதுமட்டுமின்றி, நகலேடுக்க, சாரத்தினை திறக்க, கருவிப்பட்டை, பக்கப்பட்டை என கணினி தமிழ் விளையாடுகிறது.
தரவிரக்க -
இந்த தமிழ் Firefox உலாவியை தரவிரக்க இங்கு சொடுக்கவும்.
மற்ற மொழிகளிலுள்ள Firefoxஇன் பதிப்புகள் எல்லாவற்றையும் இங்கே காணலாம்.

பாவேந்தர் பாரதிதாசன் புத்தகங்கள் – இலவச தரவிரக்கம்

பாரதிதாசனின் பாண்டியன் பரிசு தான், நான் முதன் முதலாக வாசித்த வரலாற்று நாவல். அதன் அழகு அவரின் எல்லா புத்தகங்களையும் வாசிக்க தூண்டியது.
இருண்ட வீடு அவரின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று. மொழி நடைமுதல் அந்த நாவலின் சூழல், கதாபாத்திரங்கள் என எல்லாவற்றிலும் வினோதம் இருக்கும்.
இளைஞர் இலக்கியம் முழுக்க முழுக்க எளிமையான பாடல்களைக் கொண்டது.

அழகின் சிரிப்பு புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
இளைஞர் இலக்கியம் புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
இசை அமுது புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
குடும்ப விளக்கு புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
பாண்டியன் பரிசு புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
தமிழச்சியின் கத்தி புத்தகத்தை தரவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.

இணையத்தில் இசைக் கருவிகளை இலவசமாக வாசிக்க

இசை இலவசம் -
இசைக் கருவிகளின் இலக்கணங்கள் இங்கே தேவையில்லை. விலையைப் பற்றிய கவலைகள் தேவையில்லை. நமக்கு இணையம் எனும் கடவுள் இருக்கிறார். இங்கு எல்லாம் இலவசமாகக் கிடைக்கின்றன.
இந்த இசை கருவிகளை இயக்க உங்களுக்கு தட்டச்சு கருவியும், கணினி எலியும் மட்டும் போதும். ஒரு சொடக்கில் இனிமையான இசை உங்களுக்குச் சொந்தம்.
கிடார் -

இசைக் கருவி கிடாரை (guitar) வாசிக்க இங்கே சொடுக்கவும்.
பியானோ –

இசைக் கருவி பியானோ (piano) வாசிக்க இங்கே சொடுக்கவும்.
டிரம்ஸ் -

இசைக் கருவி டிரம்ஸ் (drums) வாசிக்க இங்கே சொடுக்கவும்.
பேன் புலூட் –

இசைக் கருவி பேன் புலூட் (Pan flute) வாசிக்க இங்கே சொடுக்கவும்.
போன்கோஸ்-

இசைக் கருவி போன்கோஸ் (Bongos) வாசிக்க இங்கே சொடுக்கவும்.
கற் கருவிகள் -

கற்களால் ஆன இசைக் கருவி (Stone Musical Instruments) வாசிக்க இங்கே சொடுக்கவும்.
அனைத்து இசைக் கருவிகளையும் வாசிக்க இங்கே சொடுக்கவும்
இசை மென்பொருள் -
அனைத்து இசைக் கருவிகளின் தன்மையுடைய மென்பொருளை தரவிரக்கம் செய்ய
இங்கே
சொடுக்கவும்.

மதுரை வீரன் கதை

கருப்பு, ஐயனார் போல மதுரைவீரனும் பரவலாக எல்லோரும் வணங்கும் கடவுளாக இருக்கிறார். மதுரை வீரன் கதைப்பாடலும், மதுரைவீரன் கூத்தும் இந்தக் கதையை காலங்காலமாக மக்களிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன. சரித்திரங்களை படங்களாக கொண்டு செல்லும் முயற்சியில் எம்.ஜி.ஆர் எடுத்து நடித்த படம் “மதுரைவீரன்”.
எல்லா தெய்வங்களைப் போல சாதிபாராமல் வணங்கினாலும், மதுரைவீரன் சத்திரியன் அல்ல, சக்கிலியன் என்று சொல்வோரும் உண்டு. ஆனால் கதைப் பாடல்களில் அரசனின் மகனாகவே மதுரைவீரன் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். தாழ்த்தப்பட்ட ஒருவனை தலைவனாக ஏற்றுக் கொள்ளாத மக்கள் இருக்கிறார்கள். கதையில் திரிபு ஏற்படுத்தி தந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது. உண்மை எதுவென மதுரைவீரனை குலதெய்வமாக வணங்கும் நண்பர்கள் தான் சொல்லவேண்டும்.

கதை -
வாரணவாசி பாளையம் அரச குடும்பம், ராணிக்குக் குழந்தை பிறக்கிறது. ஆண் குழந்தை. சந்தோஷத்துடன் தமுக்கடித்து அறிவிக்கிறார்கள். ஆனால் ‘கொடி சுற்றிப் பிறந்திருக்கிற குழந்தையால் அரசுக்கும், குடிமக்களுக்கும் ஆபத்துவரும். அதனால் குழந்தையைக் காட்டில் கொண்டுபோய் விட்டுவிடவேண்டும்’ என்று சொல்கிறார் அங்குள்ள ஜோதிடர். ராணிக்குப் பிரிய மனமில்லை. மன்றாடிக் கெஞ்சுகிறார். இருந்தும், கதற கதறக் குழந்தையைப் பிரிக்கிறார்கள். கொண்டு போய் ஊர் எல்லையிலுள்ள காட்டில் விடுகிறார்கள் காவலர்கள்.
காட்டிற்குள் வந்த தாழ்த்தப்பட்ட ஜோடி அந்தக் குழந்தையை எடுத்து வளர்க்கிறது. வீரன் என்று பெயரிடுகிறார்கள். என்னதான் திறமையிருந்தாலும், தன்னைத் தாழ்ந்த சாதி என்று சொல்லி ஒதுக்கும்போது கோபப்பட்டு எதிர்க்கிறான் வீரன். ஆற்றில் விழுந்த ராஜகுமாரியான பொம்மியைக் காப்பாற்றுகிறான். பிறகு அரண்மனையை விட்டுத் தள்ளி பொம்மி விரதம் இருக்கும்போது காவலுக்குப் போகிறான். காதல் உருவாகிறது. அரண்மனையில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. வீரனைப்பிடித்து யானை மிதித்து சாகவேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார்கள். அந்த நேரத்தில் யானையில் வந்து காப்பாற்றுகிறாள் பொம்மி.
திரும்பவும் வீரனைப் பிடிக்க திருச்சி மன்னரின் படை உதவியைக் கேட்கிறார்கள். வீரன், பொம்மி இருவரையும் பிடித்து திருச்சி மன்னர்முன் நிறுத்துகிறார்கள். சாதியை ஒரு பொருட்டாக நினைக்காமல் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கிறார் மன்னர். கூடவே, தனது தளபதியாக்கி திருமலைமன்னரின் அழைப்பை ஏற்று மதுரைக்கு அனுப்புகிறார்.
திருடர்களின் பிடியில் சிக்கியிருக்கிறது மதுரை. அழகர் மலைப்பகுதியில் சங்கிலிக் கருப்பன் தலைமையில் ஒரு கொள்ளைக்கூட்டம். அதைப் பிடிப்பதற்கு முன்பு அரண்மனை நாட்டியப் பெண்ணான வெள்ளையம்மாள் வீட்டில் கொள்ளை. போய்த் தடுக்கிறான் வீரன். அந்த வேகம் வெள்ளையம்மாளின் மனதைக் கவர்கிறது. திருமலை மன்னரும் அவள் மேல் காதலுடன் இருக்கிறார். இதில் வீரன் தலையிடுவதை அவர் விரும்பவில்லை.
பத்து நாட்களுக்குள் கொள்ளைக் கூட்டத்தைப் பிடிக்கக் கெடு விதிக்கிறார். மாறு வேடத்துடன் கொள்ளையர்கள் தங்கியிருக்கிற இடத்தைச் சுற்றி வளைக்கிறான் வீரன். பல பொருட்களை மீட்கிறான். கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் மட்டும் தப்பிவிடுகிறான்.
பத்து நாட்களுக்கான கெடு முடியாத நிலையில், மீட்ட பொருட்களை மொத்தமாக அரசனிடம் ஒப்படைப்பதற்காக வீட்டில் வைத்திருக்கிறான். பௌர்ணமி அன்று வெள்ளையம்மாள் வீட்டுக்குப் போகிறான். அரசனின் நெருக்கடி தாங்கமாட்டாமல் தன்னைச் சாகடித்துக் கொள்ள தயாராகிறாள் வெள்ளையம்மாள். வீரன் தடுத்து அவளையும் மனைவியாக்கிக் கொள்கிறான்.
திருமலை மன்னருக்குக் கோபம். வீரனைக் கைது செய்கிறார்கள். விசாரணை நடக்கிறது. திருடர்களுக்கு வீரன் உதவியாக இருந்ததாக பொய்க் குற்றம் சுமத்தப்படுகிறது. வாதாடுகிறான் வீரன். பலனில்லை. மாறு கை, மாறு கால் வாங்க உத்தரவிடுகிறார்கள்.
மாட்டு வண்டியில் கட்டிய நிலையில் வீரனைக் கொண்டு போகிறார்கள். அதற்குள் மன்னனிடம் போய்ச் சண்டையிடுகிறாள் வெள்ளையம்மாள். மன்றாடுகிறாள் பலனில்லை. கடைசியில் மனம் மாறி, கொலைக்களத்திற்குப் போகிறார் மன்னர்.
அதற்குள் கொலைக்களப் பீடத்தின் மீது நிறுத்தி மாறுகை மாறுகால் வாங்கி விடுகிறார்கள். துடிதுடித்து வீரன் உயிர் துறந்ததும், அவனது மனைவிகளான பொம்மியும், வெள்ளையம்மாளும் கூடவே விழுந்து உயிர்துறக்கிறார்கள்.

தினமலர்

தினமலர் நாளிதலில் வெளிவரும் சிறுவர் மலர், வாரமலர், கம்பியூட்டர் மலர் புத்தகங்களை மென்நூல் வடிவில் தருகின்றார்கள். ஆர்வம் உள்ளவர்கள் இங்கே சொடுக்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

முத்துப்பட்டன் கதை

கேரளத்தில் நெடுமங்காடு அருகே உள்ள ஆரியநாடு செழிப்புடைய நாடு. அந்த நாட்டில் பிராமணச் சாதியைச் சார்ந்த ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் கடைசியாகப் பிறந்தவன் முத்துப்பட்டன். அவன் நல்ல உடல் வலிமை உடையவன். போர்க்கலைகளைப் படித்தவன். வாள் யுத்தத்தில் வல்லவன்.
ஒருமுறை முத்துப்பட்டனுக்கும் அவனது சகோதரர்களுக்கம் இடையே மாறுபாடு வந்தது. அதனால் முத்துப்பட்டன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டே புறப்பட்டுவிட்டான். காடு மலைகள் எல்லாம் அலைந்தான். கொட்டாரக்கரை என்ற ஊருக்கு வந்தான். கொட்டாரக்கரையில் அப்போது அரசனாயிருந்தவன் பெயர் ராமராசன். அந்த அரசன் முத்துப்பட்டனைத் தன் பாதுகாப்பு படைவீரனாக வைத்துக்கொண்டான். பல சிறப்புகள் அவனுக்குச் செய்தான்.
முத்துப்பட்டன் அண்ணன்மார்கள் தம்பியைத் தேடி ஒவ்வொரு ஊராக வந்தார்கள். கொட்டாரக்கரைக்கும் வந்தனர். அங்கு பவிசோடு இருந்த தம்பியைக் கண்டனர். ‘ ‘தம்பி! எங்கள் தவறுகளை மன்னித்துவிடு. சேஷையர் மகளை உனக்குப் பேசி முடித்திருக்கிறோம். நீ சொல்லாமல் கொள்ளாமல் வந்துவிட்டாயே, எங்களுடன் வீட்டுக்கு வா ‘ ‘ என்றனர். முத்துப்பட்டனோ ‘ ‘நான் இப்போது ராமராசனின் சேவகன். அவரிடம் உத்தரவு கேளுங்கள். வருகிறேன் ‘ ‘ என்றான். அண்ணன்மார்கள் ராமராசரிடம் தம்பியை அழைத்துச் செல்ல அனுமதி கேட்டனர். ராமராசனும் மகிழ்ந்து அனுமதியும் கொடுத்தார். முத்துப்பட்டனுக்கும் பரிசுகளும் கொடுத்தனர்.
முத்துப்பட்டன் அண்ணன்மார்களுடன் ஆரியங்காவு காட்டு வழியே தன் ஊருக்குச் சென்றான். வழியில் அரசடித்துறை என்ற இடத்தில் தங்கினார்கள். முத்துப்பட்டன் ‘ ‘நான் இங்கு கொஞ்ச நேரம் இருந்து வருகிறேன், நீங்கள் வேண்டுமானால் செல்லுங்கள் ‘ ‘ என்றான். அண்ணன்மார்கள் அவனது பொருளுக்கு ஆசைப்பட்டு அவனை அங்கேயே விட்டுவிட்டு சுமையுடன் நடந்தார்கள்.
முத்துப்பட்டன் அந்தப் பாறையில் கண் அயர்ந்த நேரம் மெல்லிய குரலில் யாரோ பாடுவதைக் கேட்டான். திரும்பிப் பார்த்தான். இரண்டு பெண்கள் ஒரு நாயுடன் வருவதைக் கண்டான். அழகான பெண்களின் அருகே சென்றான்.

அப்பெண்களிடம் ‘ ‘இனிய குரல் வளமும் அழகிய அழகும் பொருந்திய பெண்களே! உங்கள் அழகு என்னை மயக்குகிறது. என் தாபத்தைத் தீருங்கள் ‘ ‘ என்றான்.
அந்தப் பெண்களோ ‘ ‘என்ன அநியாயம் இது. நாங்கள் சக்கிலியப் பெண்கள். நீரோ பிராமணச் சாதியினர். இதை நீர் கேட்கவே கூடாது ‘ ‘ என்றனர்.
முத்துப்பட்டன் அவர்களிடம் ‘ ‘நீங்கள் இல்லாமல் என்னால் வாழமுடியாது. உங்களுக்காக நான் எல்லா உறவுகளையும் விட்டிவிட்டு இங்கேயே தங்கத் தயாராக இருக்கிறேன் . என்னை அணைத்துக்கொள்ளுங்கள் ‘ ‘ என்றான். அவர்கள் அஞ்சி ஓடினர். முத்துப்பட்டன் அவர்களைத் துரத்தினான். அவர்கள் காட்டுமரங்களுக்குள் நுழைந்து ஓடினர். பட்டன் விடவில்லை. அப்பெண்களோ குறுக்கு வழியே போய் தந்தையை அடைந்தனர். காட்டில் ஓடமுடியாத பட்டன் நின்றுவிட்டான்
தந்தையிடம் ‘ ‘தந்தையே எங்களை ஒரு பட்டன் துரத்தி வருகிறான் ‘ ‘ என்றனர். தந்தையான பகடை ‘ ‘இப்போதே அப்பாதகனைக் கொன்று வருகிறேன் ‘ ‘ என்று கூறி வல்லயத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.
பகடை காட்டுவழியே வரும்போது பட்டன் காட்டுச் செடிகளுக்கிடையே கிடந்தான். பகடை அழகொளிரக் கிடக்கும் பட்டனைப் பார்த்து ‘ ‘ஐயோ இத்தனை அழகான இளைஞன் யாரோ ? இவன் தந்தை யாரோ என எண்ணினான். சிறிய கல்லை அவன் மேல் விட்டெறிந்தான். பட்டன் விழித்தான். சக்கிலியனைப் பார்த்தான். ‘ ‘ நீர் யார் ? ‘ ‘ எனக் கேட்டான்.
சக்கிலியன் ‘ ‘என் பேர் பகடை. என் புதல்விகள் பொம்மக்காவும் திம்மக்காவும் இந்தக் காட்டுவழியே வரும்போது ஒரு பட்டன் அவர்களை மோசம் செய்ய வந்திருக்கிறான். அவனைக் கண்டதுண்டமாக வெட்டி காட்டு நரிகளுக்குப் போட வந்தேன் ‘ ‘ என்றான்.
அதைக் கேட்ட பட்டன் புலம்ப ஆரம்பித்தான். ‘ ‘ ஐயோ மாமனாரே, உன் மக்களுக்காக ஆசைப்பட்டது நான்தான். உன் பெண்களுக்காக உடன் பிறந்தவர்களை வெறுத்து நிற்கிறேன். நாலுபேர் அறிய உன் பெண்களை மணம் செய்துகொள்ளுகிறேன் ‘ ‘ என்றான்.
பகடையோ ‘ ‘ஐயோ நான் சக்கிலியன். நாய் சாதி. என்னை நீங்கள் தீண்டமுடியுமா ? நாங்கள் செத்த மாட்டைத் தின்பாம். சேரியில் வாழ்வோம். தோலை அழுகு வைப்போம். மாடு அறுப்போம். சாராயம் குடிப்போம். இது வேண்டாம் அந்தணரே ‘ ‘ என்றான்.
பட்டனோ ‘ ‘மாமனே சொல்வதைக் கேள், புண்ணியம் உண்டு. உன் மக்களை எனக்கு மணம் செய்து வை. உன் ஜாதியில் நான் இணைந்துவிடுகிறேன் ‘ ‘ என்றான்.
பகடை ‘ ‘எங்களைப்போல் நீயும் தோல் செருப்பு அணிந்து பூ நூல் அறுத்து குடுமி இல்லாமல் இருந்தால் என் மக்களை உனக்குத் தருகிறேன். நீ உன் தமயன்மார்களிடம் இதைச் சொல்லி வரவேண்டும் ‘ ‘ என்றான்.
முத்துப்பட்டன் சக்கிலியன் பேச்சுக்குச் சம்மதித்தான். தன் அண்ணன்மார்களைத் தேடிச் சென்றான். அவர்கள் விக்கிரமசிங்கபுரம் அக்கிரகாரத்தில் இருப்பதை அறிந்து அங்கு சென்றான். தான் ஒரு சக்கிலியனின் புதல்விகளை மணம் செய்யப் போவதைச் சொல்லி அனுமதி கேட்டான். அண்ணன்மார்கள் ‘ ‘உனக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா ? ‘ ‘ என்று கேட்டு பொங்கி எழுந்தனர். பலவாறாக நயந்தும் பயந்தும் சொல்லிப்பேர்த்தனர். பட்டன் கேட்கவில்லை. பட்டனைப் பெரிய அறையில் அடைத்து வைத்தனர்.
முத்துப்பட்டனோ நில அறைக்கல்லைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியே வந்தான். விக்கிரமபுரச் சந்தையில் தோல் செருப்பு தைத்துக்கொண்டான். பூநூலை அறுத்தான். குடுமியைக் களைந்தான். பகடையின் வீட்டிற்கு வந்தான்.
பகடை வேறுவழியில்லாமல் திருமணத்திற்குரிய ஏற்பாடுகளைச் செய்தான். தன் ஜாதிச் சனங்களை வரவழைத்தான். பெரிய பந்தலிட்டான். வாழைக்குலை நாட்டினான். பெரிய மணவறை செய்தான். பட்டனுக்குத் தன் மகளைக் கொடுத்தான். திருமணம் இனிதே நடந்தது. பொம்மக்காளும் திம்மக்காளும் சாதி முறைப்படி பட்டனுக்கு சாப்பாடு கொண்டு வைத்தனர். தன் பங்கு மாடுகன்றுகளுடன் முத்துப்பட்டன் சக்கிலிய குடியில் வாழவந்தான்.
திருமணம் முடிந்ததும் சக்கிலியப் பெண்கள் கும்மி அடித்தனர். அவர்களுடன் சேர்ந்து முத்துப்பட்டனும் கும்மியை ரசித்தான். கும்மி முடிந்ததும் பட்டன் பொம்மக்கா மடியில் தலையையும் திம்மக்கா மடியில் காலையும் வைத்து உறஙகினான். உறஙகும்போது தன் கையில் கட்டிய காப்பு நூலைக் கரையான் அரிக்கவும், உடம்பு கெட்டுப்படவும், கோழிக்கூட்டிலிருந்து வரவும் கனவு கண்டான்.
அந்த வேளையில் ஒரு தொப்பி ஆள் வந்தான். ‘ ‘அண்ணே முத்துப்பட்டா உங்கள் கிடை மாடுகளை வன்னியர் கொண்டு போகிறார்கள் ‘ ‘ என்றான். பட்டன் சினத்தோடு எழுந்தான். ‘ என் மாடுகளைத் திருடிய ‘வன்னியரையும் உப்பளங்கோட்டை மறவர்களையும் இப்பொழுதே அழிக்கிறேன் ‘ ‘ எனக் கூறிப் புறப்பட்டான்.
முத்துப்பட்டனை அவன் மனைவிகள் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்று சொல்லி தடுத்தனர். பட்டனோ அவர்களை வகை வைக்கவில்லை. மனைவிகள் வளர்த்த பூச்சி நாயை துணைக்கு அழைத்துக்கொண்டு வன்னியர்களை எதிர்க்கச் சென்றான். அவர்களுடன் போரிட்டு எல்லோரையும் வெட்டி வீழ்த்தி மாடுகளை மீட்டான். பின்னர் உடம்பில் பட்ட குருதியை ஒரு சுனையில் கழுவச் சென்றான்.
அப்போது ஏற்கனவே ஏற்பாடுசெய்திருந்தபடி சப்பாணி ஒருவன் பின்னாலிருந்து பட்டனைக் குத்திக் கொன்றுவிட்டான். பட்டன் இறந்ததைப் பார்த்து பூச்சி நாய் சக்கிலியனின் வீட்டிற்கு ஓடி பொம்மக்கா திம்மக்காவை பிடித்து இழுத்தது. பொம்மக்காவும் திம்மக்காவும் பட்டனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்பதை உணர்ந்து சாதமும் கறியும் எடுத்துக்கொண்டு நாயின் பின்னால் சென்றனர்.
பட்டன் இறந்துகிடந்த இடத்திற்கு அவர்கள் வந்தனர். இறந்த கணவனைப் பார்த்ததும் அலறிப் புலம்பி சட்டியை எறிந்துவிட்டு அவன் மேலே விழுந்து அழுதனர். பட்டனை எடுத்தத் தோள் மேல் போட்டுக்கொண்டு சிங்கம்பட்டி அரண்மனைக்குச் சென்றனர். அரசனிடம் தங்கள் வரலாற்றைக் கூறி தாங்கள் பட்டனுடன் தீயிலே இறக்க அனுமதி கேட்டனர். பழிபாவம் ஏற்படும் என்று மன்னன் மறுத்துப் பார்த்தான். பெண்கள் ஒரேயடியாய் கெஞ்சினர்.
அவர்கள் கற்பின் உறுதியைக் கண்ட மன்னன் பெரும் தீ வளர்க்க உதவினான். அத்தீயில் இருவரும் பாய்ந்து உயிரை விட்டனர். அவர்கல் கதையை கேட்ட ஊரார் அவர்கள் தெய்வங்களாகி விட்டதை அறிந்தனர். மன்னன் அவர்களுக்கு கோயில் எடுப்பித்து பலியும் பூசனையும் செய்வித்தான். அவர்கள் தெய்வங்களாகி அருள் புரிந்தனர்.

சுடலை மாடன் கதை

1)
சுடுகாட்டில் வாழும் தெய்வம் என்பதால் “சுடலை” என்றும் மாட்டை வாகனமாகக் கொண்டதால் “மாடன் என்றும் வழங்கி, அவ்விரண்டும் இணைந்து “சுடலைமாடன்” என்ற பெயர் உருவானது. சிவனை சுடலை எனவும், சுடலைமாடன் எனவும் குறிப்பிடுவதுண்டு. சுடலைமாடனை சிவ அம்சமாகவே சைவர்கள் பார்க்கின்றார்கள்.
பார்வதி சிவனிடம் “தனக்கு ஆண்பிள்ளை வரம் வேண்டும்” என்று கேட்கின்றாள். சிவன் கைலாயத்தில் உள்ள முப்பத்தி இரண்டாம் தூணில் எரிகின்ற மணிவிளக்குகளில் முந்தானையை ஏந்தி நிற்குமாறு கூறுகிறான். அவ்வாறே பார்வதியும் விளக்கின் கீழ் முந்தானை ஏந்தி நிற்க, பரம சிவன் அந்த விளக்கின் சுடரை தூண்டிவிட முந்தானையில் அந்தச் சுடர் தெறித்து விழுகிறது. அந்த சுடர் வெறும் முண்டமாக இருப்பதைக் கண்ட பார்வதி பயந்து தன் கணவனிடம் கூறுகிறாள். சிவன் அந்த முண்டத்தினைத் தலையுள்ள குழந்தையாக உருவாக்குகிறான்.
அந்தக் குழந்தையை அன்போடு வளர்த்து வருகின்றனர். ஆனால் அந்தக் குழந்தை இரவில் சுடலைக்கு சென்று பிணங்களைத் தின்கிறது. அதைக் கண்ட பார்வதியும் சிவனும், அந்தக் குழந்தையை பூமிக்கு அனுப்பி விடுகின்றனர். குழந்தை சுடலையிலேயே தங்கி பிணங்களை தின்று வளர்கிறது. வாலிபம் அடைந்ததும், சுடலைக்கு பெண் தேவைப்படுகிறாள். பூலோகத்தில் இருக்கும் பெண்கள் யாரும் வேண்டாமென சிவனிடம் சென்று தனக்கு ஒரு பெண்துணை வேண்டுமென கேட்கின்றான். சிவனும் இசைந்து சுடலைமாடத்தியை உருவாக்கி கொடுக்கிறான்.
சிவன், சுடலை மாடனின் வெறியைத் தணிக்க இருவருக்கும் கொடை கொடுக்கின்றனர். அந்த விழாவில் இந்திராணியின் நடனம் நடைபெறுகிறது. சுடலை மாடன் ரத்தபலியும், மகுடச் சத்தமும் கேட்கிறான். இந்திராணியின் காற்சிலம்பின் பரல் தெறித்து விழ கணியான் பிறக்கிறான்.
சுடலை மாடனுக்காக மகுடம் வாசித்து, ஆடி, நரபலிக்கு பதிலாக நாக்கை வெட்டி ரத்தம் கொடுக்கிறான். பின்னர் சுடலைமாடன் , சுடலைமாடத்தியோடு பல வழிகளைக் கடந்து கன்னியாகுமரி வந்தடைகிறான்.
அங்கு இருக்கும் பகவதியிடம் தன் நிலையை விளக்கத் தனது காவலுக்கு அவனை வைத்துக் கொள்கிறாள் பகவதி. சில நாள்கள் கழித்து மலையாள தேசம் செல்ல விருப்பம் தெரிவிக்கிறான் சுடலை. மலையாளத்தில் உள்ள மாந்திரீகத் தன்மைகளை விளக்கி, ”அங்கு செல்வது ஆபத்து. எனவே நீ போகக் கூடாது” என்று தடுக்கிறாள் பகவதி. அதை மறுத்த சுடலை, ஆண்டிக்கோலத்தில் காளிப்புலையன், அவன் மகள் மாஇசக்கி வருகிற ஊருக்குச் செல்கிறான். அந்த ஊருக்கு வந்து சுடலைப் பாம்புகளை ஆட்டி வைத்து வேடிக்கை காட்டுகிறான். மாஇசக்கி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. எனவே, பிச்சைக்காரனாக வேடம் ஏற்று வீடுவீடாகச் சென்று பிச்சை கேட்கிறான். மாஇசக்கி வீட்டிற்குச் சென்று, தான் அவளைக் கற்பழிக்கப் போவதாக சபதம் ஏற்கிறான்.
மாஇசக்கியைக் கற்பழிக்கப் போவதாக சபதம் ஏற்ற சுடலைமாடன் அன்றிரவு பல்லியின் வடிவில் அவளைக் கற்பழிக்கிறான். அதைத் தன் தந்தையிடம் முறையிடுகிறாள் மாஇசக்கி. அவள் தந்தை காளிப்புலையன் மை போட்டுப் பார்க்கிறான். ஆனால், அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. சுடலை இதை பகவதியிடம் கூறுகிறான். பின்னர் பகவதி அவனை மன்னித்துக் காவலைத் தொடரும்படி சொல்கிறாள்.
காக்காச்சி மலையில் நான்கு பளியர்கள் பயிரிட்டு வருகின்றனர். புழுவாக வடிவம் கொண்டு சுடலை, அப் பயிர்களை அழிக்கிறான். காளிப்புலையன் மீண்டும் மை போட்டுப் பார்க்கிறான். இதற்கெல்லாம் காரணம் சுடலைமாடன்தான் என்பதை அறிகிறான். மாடன் கோபம் கொண்டதாலேயே இப்படியான அழிவுச் செயல்களைச் செய்கிறான் என்று உணர்ந்து மாடனுக்குக் கொடைவிழா எடுக்க முன் வருகின்றனர்.மாடன் காளிப்புலையனின் மகள் சூலியை பலி கேட்கிறான். காளிப்புலையன் முதலில் மறுத்தாலும் பின்னர் அவளை சுடலைமாடனுக்குப் பலி கொடுக்கிறான். பின்னர் ஒரு யானையைப் பலியாகக் கேட்கிறான் சுடலை. பட்டத்து யானையைத் திருடிக் கொண்டு வந்து புலையன் பலியிடுகிறான்.
பட்டத்து யானை காணாமல் போகவே அதைக் கொண்டு சென்றவன் காளிப்புலையன் என்பதை அறிந்த மன்னன் அவனைப் பலியிடுகிறான். அந்த பலியையும் சுடலைமாடன் ஏற்றுக் கொள்கிறான். அங்கிருந்து சொரிமுத்தையன் கோயிலுக்கு வந்து ஐயனோடு சம்போடைக்குப் போகிறான். அங்கு ஆரிய சாம்பன் மகள் ஓடைக்குக் குளிக்கப் போகிறாள். இதைக் கண்ட மாடன் மீன் வடிவில் ஓடையில் சென்று அந்தப் பெண்ணோடு கூடுகிறான். அவள் உடல் நலம் குன்றவே மாடனுக்குப் பூசை செய்கின்றனர். அந்தப் பூசையையும் பெற்றுக் கொள்கிறான்.
அங்கிருந்து கல்லிடைக்குறிச்சிக்குச் செல்கிறான் மாடன். அவ்வூர் அருகில் உள்ள பொன்னிட்டாங்கயத்தில் மீனாகத் துள்ளினான் மாடன். நாடார்கள் மரம் வெட்ட வருகின்றனர். அங்கு மீன் துள்ளிக் கொண்டிருப்பதைக் கண்ட மரம் வெட்டிகள் அந்த மீனைப் பிடித்து வெட்டி பங்கு வைக்கிறார்கள். அவர்கள் வைக்கும் பங்கு குறைந்து கொண்டே இருப்பதைக் கண்ட நாடார்கள், ‘இது மாடனுடைய வேலையே’ என்று அஞ்சி ஓடுகின்றனர். அவர்களுள் பலரை பலி எடுத்துக் கொள்கிறான் மாடன். மிஞ்சியவர்கள் பயந்துபோய்ச் சுடலை மாடனுக்குக் கோயில் எழுப்புகின்றனர். அங்கிருந்து சொரிமுத்தையன் கோயில் வன்னிமரத்தில் குடியேறுகிறான் சுடலைமாடன்.
திருச்செந்தூர் கோயிலுக்குக் கொடிமரம் செய்வதற்கு ஆசாரிகள் காட்டுக்குப் போகிறார்கள். அப்போது சகுனத் தடைகள் பல ஏற்படுகின்றன. இருப்பினும் மாடன் குடியிருக்கும் வன்னிமரத்தைச் சிலர் வெட்டுகின்றனர். அவர்களைப் பலி கொள்கிறான் மாடன். சிலரை சொரிமுத்தையன் காப்பாற்றுகிறான். பயந்து போன மக்கள் மாடனுக்குத் திருச்செந்தூரில் பூசை செய்கின்றனர். அந்தப் பூசையை ஏற்றுக் கொண்ட மாடன் அவர்களுக்குப் பயனளித்து வருகிறான்.

2)
சுடலை ஆண்டவர் கதை – அன்று ஒருநாளில் புனிதமான கைலாச பார்வதத்தில், உலகையே கட்டி காக்கின்ற சிவனும் பார்வதியும் இடவலமாக வீற்றிருந்தார்கள். அங்கு மேலும் தேவர்கள், ரிஷிமார்கள், கம்போவர்கள், கணநாதர்கள், சாரணர்கள், சித்தர்கள் என கைலாசதிற்கானவர்களும் அங்கு இருந்தனர்.
உலகிலுள்ள அனைத்து உயிர்களுக்கும், எந்த உயிருக்கு எவ்வளவு என தெரிந்து, அறிந்து உணவளிப்பதும், ஈசனகிய சிவனின் பணிகளில் ஓன்று. அவ்வாறே அன்றும் பார்வதி தேவியிடம் ஈசன், நான் பூலோகம் சென்று அனைத்து உயிர்களுக்கும் அவைகளின் பிரவிப்பயனின் படியான கணக்குப்படி உணவளித்து வருகிறேன் என கூறி பூலோகம் சென்றார்.
பூலோகத்தில் ஈசன், எறும்பு முதல் யானைவரையிலும், உருவாகுகிற திசு முதல் வயிற்றிலிருக்கும் சிசு வரையிலும் எவற்றிற்கும் குறைவில்லாது படியளக்கும்போது, அங்கே கைலாசத்தில் இருக்கும் அம்மை பார்வதியாளுக்கு ஒரு சந்தேகம் சிவனின் மீது வந்தது. தினமும் ஈசன் படியளக்க போகிறேன் என்று செல்கிராரே அது எவ்வாறு, எவருக்கும் தவறாது எப்படி படியளக்க முடியும் என்று, ஈசனின் பணிமீது, தேவியின் மனதில் ஒரு சந்தேகம் வந்தது. எனவே இதை சோதித்து அறிய நினைத்தாள் அம்மை உமையவள்.
உடனே தேவலோக தேவ கட்சரிகளை அழைத்த தேவி, நீங்கள் சென்று ஒரு காஞ்சுராம் கம்பில் கடையப்பட்ட சிறு குமிழ் ஒன்றை செய்து வாருங்கள் என்றார். அவர்களும், மூடினால் காற்றுகூட புக முடியாத அளவில் துல்லியமான ஒரு காஞ்சிரங்குமிழை உருவாக்கி அம்மையிடம் அளித்தனர். உடனே தேவி பூலோகத்தில் இருந்து ஒரு சித்தெரும்பு ஒன்றை பிடித்து சிமிழுக்குள் அடைத்து, அதை தனது சேலை முடிப்பில் முடிந்து வைத்தாள்.
சிறிது நேரம் சென்றதும் ஈசன் அனைத்து உயிர்களுக்கும் படியளந்து மீண்டும் கைலாசம் வந்தார். இறைவனுக்கு அவர் வந்ததும் செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்த தேவி, இறைவனிடம் நீங்கள் எவ்வாறு அனைத்து உயிர்களுக்கும் படியளந்தீர்கள், ஒரு உயிர் கூட விடுபட்டிருக்காதா என்று ஈசனிடம் வினவ, அதற்கு ஈசன், ஒவ்வொரு உயிருக்கும், அந்த உயிர் அதன் முற்பிறவியில் செய்த நல்ல, கெட்ட காரியங்களின் கணக்குப்படி இந்த பிறவி வழங்கப்பட்டிருக்கும், அந்த பிறவிப்பலன் படி ஒவ்வொரு உயிருக்கும், ஒவ்வொரு நாளும் எவைஎவை வழங்கப்பட வேண்டும் என கணிக்கப்பட்டு வழங்கப்படும். இந்த கணக்கீட்டில் உணவும் அடங்குவதால், அதில் தவறு நேரக்கூடாது என்று நானே நேரில் சென்று என் கவனத்தில் வைத்து அளித்து வருகிறேன். எனவே தவறவே தவறாது என்றார்.
உடனே தேவி உமையாள் ஈசனிடம், ஈசனே நீங்கள் பூலோகம் சென்ற பிறகு என்னிடம் ஒரு உயிர் அகப்பட்டுக் கொண்டது. அது ஒரு வேளை உணவின்றி, உங்களை நம்பி உயிரை கூட விட்டிருக்கலாம் என்று கூறிக்கொண்டே முடிப்பை பிரித்து சிமிழை திறந்து பார்க்க, அதிர்ந்து போனாள். அங்கே அந்த சித்தெரும்பு வாயில் ஒரு திணை அரிசியை கவ்விக்கொண்டு குமிளுக்குள் சுற்றி சுற்றி வந்தது, அதனோடு இன்னொரு சித்தெரும்பும் துணைக்கு இருந்தது. உடனே தேவி இறைவனின் காலில் விழுந்து, ஈசனே தங்களின் பெருமையை நானே மறந்து, அறியாது தெரியாது மாபெரும் தவறை செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று நடுநடுங்கி அம்மை ஈசனிடம் மாப்பு கேட்க, ஈசனோ கண்கள் சிவந்து கடும் கோபம் கொண்டு அம்மை உமையவளுக்கு ஒரு சாபத்தை உதிர்த்தார்.
அந்த சாபம் என்னவெனில், கணவனை சொதித்ததால் காட்டு பேச்சியாக போகக்கடவது, மன்னனை சோதித்ததனால் மயான பேச்சியாக போகக்கடவது. பேயாக பிறந்தாலும் போதாது, நீ சுடுகாட்டு பேயாக போகவேண்டும், (பேச்சி என்று சொன்னால் தமிழில் பேய் என்று அர்த்தம). இப்படியாக பலவித சாபங்களை கொடுத்த சுவாமிகளிடம், அம்மை அழுது புலம்பியவாறே, ஈசனே இந்த அகோரமான சாபம் எனக்கு எப்போது தீரும் என்று கேட்க, அதற்க்கு ஈசன், நீ பேச்சியாக மயானத்தில் நின்று என்னை நினைத்து மாபெரும் தவம ஒன்று செய்தால், நான் அங்கு ஒரு ஆண் குழந்தையாக நான் அவதாரம் செய்வேன். நீ அந்த குழந்தையை கையால் தொட்டதும் உன் சாபம் தீரும் என்றார்.
ஈசனின் கோபத்தினால் சாபம்பெற்று பூலோகம் வந்த அம்மை உமையவள், பூலோகத்தில் தில்லைவன காடாகிய மயானபூமியில் ஐம்புலன்களையும் அடக்கி, ஈசனை நினைத்து, அம்மாள் பேச்சியாக ஒரு மபெரும் தவத்தை செய்யதார், அப்படியே அம்மையின் தவத்திற்கு இரங்கிய ஈசன் அங்கு பேச்சியான தேவிக்கு காட்சி கொடுத்தார். அப்படியே அம்மையிடம், உனக்கு என்ன வரம் வேண்டும் என்றார். அதற்க்கு அம்மை, ஈசனே நான் கணவன் உடன் சேராது ஒரு கைக்குழந்தை வேண்டும் என்றாள். உடனே ஈசன், பெண்ணே இந்த தில்லைவன காடாகிய மயானபூமியில், சிதையில் பிணம் கொடுஞ்சுடராக எரிந்துகொண்டு இருக்கும்போது, அந்த சுடரின் அருகாமையில் வந்து கண்களை மூடி முந்தாணி சேலையேந்தி என்னை நினைத்து நின்றால், ஒரு ஆண் குழந்தை அவதாரமாகும் என்றார். அப்படியே பேச்சி யாக அம்மை தவமிருக்க, மயானத்தில் பிணங்கள் எரிந்து வரும் சுடரிலிருந்து, சிவனின் திருவருளால் அம்மாவின் முந்தாணியில் சுடலை முத்துக்கள் வந்து விழுந்தன. அம்மா அவற்றை கூட்டி அள்ள அது ஒரு சதை பிண்டமாக உருவெடுத்தது. அந்த பிண்டதிற்கு உயிர் உள்ளது, ஆனால் அதற்கு எந்த உறுப்புகளும் இல்லை. உடனே அம்மை இறைவனை நினைத்து அழுது புலம்பி, ஈசனே பிள்ளைவரம் கேட்ட எனக்கு, ஒரு முண்டத்தை தந்து விட்டீரே, நான் என்னசெய்வேன் என்று முறையிட, ஈசனின் திருவருளினால் அந்த பிண்டம் அழகான ஒரு ஆண் குழந்தை வடிவம் பெற அம்மை மகிழ்ந்தாள். சுடரில் இருந்து உருவானதால் அந்தகுழந்தைக்கு சுடலை என்று பெயரிட்டாள்.
சுடலை குழந்தையாக இருக்க, அந்த குழந்தையின் அழகானது, ஏறு நெற்றி கூர்புருவத்துடனும், இருண்ட கண்கள், சிவந்த முகம், பவளம் போன்ற நிறத்துடனும் மாபெரும் அழகுடன் இருந்தது, உடனே அம்மை குழந்தைக்கு முத்தமிட்டு, நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, மயான பூமியில் வைத்தே சுடலைக்கு அமுதம் ஊட்டி, குழந்தையுடன் கைலாசம் வந்தாள் அம்மை உமையவள்.
கைலாசம் வந்த மாயக்குளந்தை சுடலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வேகமாக வளர்ந்து வருகிறது, நாட்கள் செல்கிறது, அப்படியே ஒருநாள் குழந்தைக்கு அமுதுஊட்டி தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு பார்வதி அரனுடைய பதிக்கு சென்றுவிட்டாள். அப்போது நாடு ஜாமம் 12 மணி, அந்த நேரதிலே தொட்டிலில் இருந்த திரு குழந்தைக்கு ஒரு விதமான வாசம் தென்பட்டது, அது பிணம எறியும் வாடை, உடனே சுடலை நினைக்கிறார், அந்த அம்மா நமக்கு அமுது ஊட்டி நேரமாகிவிட்டது, நமக்கு பசிக்கிறது, இனிமேல் இந்த அம்மா ஊட்டும் அமுதம் நமக்கு போதாது, தனது வயிறு இந்த வாடை வரும் பிணங்களை தின்றால்தான் நிறையும் என்று எண்ணி, எவருக்கும் தெரியாது, வடக்குவாசல் வழியாக, தில்லைவன காடகிய மயான பூமிக்கு சென்றார். அங்கோ ஏகப்பட்ட பிணங்கள் எரு அடுக்கி எரிந்துகொண்டிருக்க, அவற்றை பார்த்த சுடலை, வெந்து கொண்டிருந்த பிணங்களின் வலது சுற்றி இடமாக வந்து, எவளவு வேண்டுமோ அவ்வளவு பிணங்களை தின்று, அத்துடன் அங்கிருந்த பேய்களுக்கும் விருந்தளித்து, பேயோடு பேயாக பேச்சி மகன் சுடலை நடனமாடினார். நேரமானது, அப்படியே கைலாசம் வந்து தொட்டிலில் குழந்தையாக படுத்துக்கொண்டார் சுடலை. அத்துடன் நில்லாது வயிறு பசிப்பது போல குவா குவா என்று அழுதார் சுடலை, குழந்தை அழுவது கேட்டு ஓடிவந்த பார்வதி அம்மாள் அப்படியே குழந்தையை அள்ளி அணைக்க, குழந்தையின் வாயில் ரத்தம் வடிய, பிணவாடையும் வீச, பார்த்தாள் பார்வதி, ஐயோ என்று அலறி குழந்தையை வீசி எறிந்து, ஈசனே, இது என்ன சோதனை, குழந்தை வரம் கேட்ட எனக்கு பிணம் தின்னும் பேயை குழந்தையாக தந்து விட்டீரே என்று அழுதாள். உடனே வந்தார் பரமசிவன், உட்காரணம் இல்லாது எவையும் நடத்த மாட்டார் ஈசன். எனினும் காரணத்தை வெளிக்காட்டாது, அம்மையை பார்த்த சிவன், ஆம் தேவி இவன் பிணம் தின்றதால், சைவமான என்னுடைய கைலயதிற்கு ஆகமாட்டான் இவனை பூலோகத்திற்கு அனுப்பிவிடுகிறேன் என்று கூறி சுடலையை அழைத்தார்.
சிவன் அழைத்ததும் வந்தார் சுடலை. மகனே சுடலை, உடல் எரியும் மயான சுடரிலிருந்து அவதாரமானதால், அந்த சுடலையாண்டியும் நீதானப்பா, மயானத்தில் மாய உருவெடுத்ததால் மாயாண்டி சுடலையும் நீயே, பேய்களுக்கு அதிகாரி நீ, பேறுபெற்ற மாசுடலையும் நீயே என்று கூறி, மகனே நீ பூலோகம் செல் அங்கு உனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது என்றார், அதற்கு சுடலை, பகவானே, என்னை அவதரித்த நீங்களே என்னை பூலோகம் செல்ல பணிக்கும்போது, நான் என்ன செய்ய முடியும். உங்களின் மனம் படியே நான் செல்கிறேன். ஆனால், அப்பனே அங்கு நான் என்ன செய்ய வேண்டும், அங்கு உணவுக்கு என்ன செய்வேன், இப்படியே போனால் என்னை யார் மதிப்பார்கள், பூலோகத்தில் எங்கு இருப்பது என ஈசனிடம் கேட்க, அதற்கு ஈசன், மகனே, என் ஒரு கணி அசைவிற்க்கும் காரணம் உண்டு, நீ அங்கு சென்றதுமே நான் உன்னை நடத்துவேன். பூலோக இடுகாட்டு சிதைகளில் உனக்கு உணவு கிடைக்கும், அது போக மனிதர்கள் உனக்கு வில்லோடு முரசோடு வீரகண்டன் கொட்டோடு ஊட்டு போட்டு கோடை கொடுப்பார்கள் நீ போகலாம் என்று சொல்ல, சுடலையோ ஈசனை பார்த்து, பகவானே அதே ஊட்டு பூசையை இந்த கைலாசதிலேயே எனக்கு போட்டு தாருங்கள், அப்போதுதான் நான் பூலோகத்திலும் சென்று இதுபோல கேட்க முடியும் என்ன்று சொல்ல, படைப்பின் குணமறிந்து, கொடுப்பதை கொடுத்து இடத்தை மாற்ற நினைத்தார் சிவம்.
நித்ய சைவமான ஸ்ரீ கைலயதில், அனைத்து தேவதைகளும் அதிர்ச்சியில் நிற்க, சுடலைக்காக ஈசனே நின்று, கைலாச வாசலிலேயே பலவிதமான இரத்த பலிகளை கொடுத்தார். அந்த பலிகளானது, பரண் பரணாக ஆடு, எருமை, பன்றி, என பலவிதமான உயிர்வகைகளுடன் நிறைந்திருந்தது. அவற்றை உண்ட சுடலையோ, மீண்டும் ஈசனை பார்த்து, அப்பனே எனக்கு தகுந்த வரங்களை கொடு நான் செல்கிறேன் என்று சொல்ல, உடனே ஈசன் சில வரங்களை கொடுத்தார். அவைகளாவன, மகனே உனக்கு ஓங்கார பேய்களை எல்லாம் உருட்டி அடக்க வரம், தர்க்கமிடும் பேய்களை எல்லாம் தடி கொண்டு விரட்ட வரம், நீ மயான சாம்பலை கையிலெடுத்தால் தீராத வினைகளும், நோய் நொடிகளும் தீர்ந்தொளியும் என்றார். அதற்கு சுடலையோ, நல்லவை மட்டுமே செய்தால் போதாது அப்பனே, கேட்டவர்களுக்கு கேடும் செய்ய வேண்டும். நல்லவர்கள் என்னை அறியாவிட்டாலும், எனக்கு பணிவிடை செய்யாவிட்டாலும் நான் நல்லது செய்வேன், ஆனால் கெட்டவர்கள் மற்றும் துஷ்ட தனமானவர்கள், என் காலடி பணிந்தாலும் நான் கருவருப்பேன், அதற்கு வரம் தாருங்கள் என்று கேட்க, ஈசனோ கேள் தருகிறேன் என்றார்.
உடனே சுடலை அப்பனே, நான் இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு இருப்பேன், நேரம் தப்பிய வேளையிலே, என் சட்டத்திற்கு விரோதமானவர்களோ, என்னை நம்பும் நல்ல குணவானுக்கு தீங்கு செய்பவனோ, மற்றும் துரோகிகளோ என் எல்லைக்குள் நுழைந்தார்களானால், அப்படியே, நேரம் தப்பி வருவோரை நெஞ்சடியாய் அடிக்கவரம், துரோகித்த, வாலிகளையும் சூலிகளையும் வஞ்சி கொண்டு குத்த வரம், மூன்று மாத சூலிகளை முட்டை போல நேரிக்கவரம், நிறை வயிராய் வருபவரை குறை வயிராய் ஆனுப்பவரம், என பலவகையான துஷ்டதனமான வரங்களை கேட்க, ஈசன் அனைத்தயும் கொடுத்தார்.
கயிலை நாதனாம் ஈசனிடமிருந்து, அனைத்து வரங்களையும் பெற்ற சுவாமி, வீர வேசம், விகாரமான சொருபத்தோடு, கைலாசத்தின் தெற்கு கோட்டை வாசல் வளியாக, பூலோகத்தில் இறங்க, தெற்கு நோக்கி அங்கே முதல் ஸ்தலம் திருக்கேதாரம், அடுத்து வரிசையாக, புத்த காசி, கெளரிகுண்டலம், உத்திரபிரயாதை, தேவபிரயாதை, ஹரித்துவாரம் என பலபல புனித ஸ்தலங்களை கண்டு வணங்கி, வடகாசியில் 64 தீர்த்தங்களில் நீராடி, அடுத்து இறக்க முக்தியாம் காசியிலும் மற்றும் பல தீர்த்தங்களிலும் நீராடி நமது தென்னாடு வந்தார். தென்னாட்டில் திருவேங்கடமலையில் திருவேங்கட நாதரையும், அடுத்து திருக்காளாத்தி ஈசனையும் வணங்கி, அடுத்ததாக பல்லவர்கள் ஆண்டு வரும் தொண்டை நாட்டிலே, பஞ்சபூத மண்டல ஸ்தலமாகிய காஞ்சியை கண்டார். அங்கு காஞ்சி அம்மாளையும், ஏகாம்பரநாதனயும் வணங்கி, அடுத்து திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் முக்திபெற்ற அண்ணாமலையாரையும், உண்ணாமுறைஅம்மாளையும் வணங்கி, மேலும் சிதம்பரம், சீர்காழி, திருவணைக்காவல் என பலபல ஸ்தலங்களை கண்டு வணங்கிய சுவாமி மாயாண்டி சுடலை, பாண்டியநாட்டு எல்லைக்கு வந்தார். அங்கு மதுரையில் வைகையில் தீர்த்தமாடி மதுரை மீனாட்சி அம்மாளையும், சோமசுந்தர பெருமாளையும் வணங்கினார். இப்படியே 1008 சிவ ஸ்தலங்கள், 108 திருப்பதிகளையும் மாயாண்டி சுடலை வணங்கிவந்தார். கடைசியாக மலையாள நாடு காணவிரும்பிய சுடலை, மலையாள மேற்ற்கு கடலோரம் கோகுர்ணம் என்று ஒரு புண்ணிய ஸ்தலம் அங்கு சென்று சிவத்தை வணங்கி, அடுத்ததாக வைக்கியம், குருவாயூர், திருவனந்தபுரம் என பல இடங்களை தரிசித்து கொட்டாரக்கரை என்ற ஊருக்கு வந்தார். அந்த ஊரின் அருகில் பேச்சி பாறை மலை. அங்கே சென்ற சுவாமி அங்கிருந்து கீழ்த்திசையில் பார்க்க, அங்கே பகவதி என்ற பெண் தேவதை இருப்பதை கண்ண்டார்.
கொட்டார கரையிலிருந்து அந்த பகவதி அம்மன் என்ற தேவதை மலையாளத்தை ஆண்டு வருகிறது. பகவதி அம்மனுக்கு மாதம் இரண்டு திருவிழா, வருடம் இரண்டு தேரோட்டம் நடக்கிறது. அப்படியே பகவதி அம்மன் தேர் திருவிழாவுக்கு அன்றும் கொடியேறி ஒன்பதாவது நாள் ஆகையால் தேரோட்டம் நடந்தது. தேரிலே அமர்ந்து பகவதி அம்மன் தெருவழியே ஊர்வலம் வந்து கொண்டு இருந்தார். அங்கோ வேதர்கள் எல்லாம் வேதங்களை சொல்லிவர, தேவதாசிகள் தேருக்கு முன்னால் ஆடிவர, நட்டுவன் கொட்டிவர, ஆடலுடன் பாடலுமாக அந்த அம்மன் பகவதி தேர் பவனி வருகிறாள். பார்த்தார் மாயாண்டி சுடலை. எந்த தெய்வத்திற்கு தேர் பவனி நடக்கிறதோ அந்த தெய்வத்தின் கொடி அந்த ரதத்தில் பறக்கும். திருமாலுக்கு கருட கொடி, சிவனுக்கு காளை கொடி, பிரம்மாவுக்கு அன்ன கொடி, முருகனுக்கு சேவல் கொடி, விநாயகருக்கு எலி கொடி. ஆனால் இங்கு ரதத்தில் பறக்கும் கொடியோ சிங்க கொடி. பார்த்தார் செஞ்சுடலை மாயாண்டி. சிங்க கொடி பறப்பதால் அதுவும் நமது தாய்தான் என புரிந்து கொண்ட மாயாண்டி சுடலை, அங்கே பேச்சி பாறை மலையிலிருந்து ஒரே பாச்சலாக தேர் மீது பாய்ந்தார். தேரில் சுடலை விழவும் தேரின் அச்சாணி இரண்டாக முறிந்தது. அங்கே சிலர் தேரோட்டம் பார்க்காது பக்தி மார்கமின்றி, ஆடிவரும் தாசிகளை பார்த்து கொண்டு இருந்தார்கள், அதில் ஒருவன் தலையை பிடுங்கி அவன் ரசித்த தாசியின் முகத்தில் வீசினார். அலறி விழுந்து இருவரும் மாண்டனர். அங்கிருந்து ஒரே பாச்ச்சலாக பகவதி அம்மனின் கோட்டைக்கு வந்தார். கோட்டைக்குள் வந்து கதவை சாத்திக்கொண்டு, உள்ளே கடுமையான அட்டகாசங்களை செய்தார் மாயாண்டி சுடலை. கோட்டையை இடிக்கின்றார், கொடிமரத்தை அசைகின்றார், கொடிமரத்தில் ஒருகாலும் கோபுரத்தில் ஒருகாலும் வைத்து ஆதாழி செய்தார்.
அம்மை பகவதி பார்த்தாள், எவனோ ஒருவன், நம் ரதத்தை ஓடித்துவிட்டு கோட்டையிலும் சென்று ஆதாழி செய்கிறானே, இது என்ன விவகாரம் என்று மந்திரவாளோடு கடும் கோபத்தோடு கோட்டைக்கு வந்தாள். வாயில் கதவை தட்டி, யாரடா நீ, பகவதி கோட்டையில் வந்து ஆதாழி செய்ய உனக்கு என்ன தைரியம் என்று சத்ப்தமிட்டு, கதவை திறக்கிறாயா, அல்லது எனது மந்திர வாளுக்கு பலியாகிறாயா என்று கேட்க்க, பார்த்தார் மாயாண்டி சுடலை, அம்மை மிகவும் கோபமாக இருக்கிறார். இந்த ரூபத்துடன் அம்மை நம்மை கண்டால் அம்மையின் கோபம தீராது என்று எண்ணி, ஒரு ஏழு வயது சிறுவனின் உருவம் பூண்டு அம்மையின் முன்னே பாலகனாக நின்றார் மாயாண்டி சுடலை. அம்மை நேருக்கு நேராக பார்த்தாள் சுடலையை. இந்த பாலகனா இவளவு சேட்டை செய்தது, வேறு யாராவது கோட்டையில் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு சுடலையிடம் வந்து, யாரப்பா நீ, உன் குலம் கோத்திரம் என்ன, ஏன் அனாதையாக வந்து நிற்கிறாய் என்று, குழந்தையை கண்டவுடன் சோகம் உட்புகுந்து, இறக்க குணத்துடன் அம்மை சுடலையிடம் கேட்டார்.
சுடலை சொன்னார், அம்மையே என்னுடைய வரலாறே மிகவும் விசித்திரமானது, எல்லாரு இறந்த பிறகுதான் சுடுகாடு போவார்கள், ஆனால் நான் படைக்கப்பட்டதே மயான சுடலையில், சுடலையில் உருவானதால் எனக்கு சுடலை என்று பெயரிட்டார்கள். நான் பார்வதியாள் பிள்ளை, பரமனுடைய அமுஷம், பிறந்த இடம் உயர்ந்த இடம், நல்ல பிள்ளையாக இருந்திருக்கலாம், வீட்டுக்கு அடங்காமல் மாயானத்திலே போய் பிணத்தை தின்றுவிட்டு வந்துவிடவே அவர்கள், என்னை, நீ மாமிசத்தை தின்றதால் மாணிக்க கைலாயத்திற்கு ஆகாது எனவே, பூலோகத்திற்கு செல் என்று புறக்கணித்து அனுப்பிவிட்டார்கள். ஆகையால் தாயே இங்கு நான் தலை கீழாக வந்து விழுந்து விட்டேன்.
இந்த மண்ணுலகில் தாயே எனக்கு, அக்கமில்லை பக்கமில்லை ஆதரிப்பார் யாருமில்லை, திக்கு அற்ற பாவி போல இந்த தெருவில் நின்று தவிக்கின்றேன், நான் பார்வதிக்கு பிள்ளை என்றால் இந்த பகவதிக்கும் குழந்தைதானே, இப்போது வளப்பார் கை பிள்ளையாக வந்தேனம்மா உன்னிடத்தில், இருக்க ஒரு இடம் கொடு, நான் இருக்கின்றேன் உன்னுடனேயே என்றார் மாய சுடலை. பகவதி அம்மனுக்கு இரக்கமாகவும் இருந்தது, பார்த்தாள் பகவதி, இப்படி ஒருவன் நமக்கும் தேவைதான் என்று எண்ணி, மகனே நீ பார்வதிக்கு பிள்ளை எனில், நீ எனக்கும் பிள்ளைதான், அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நீ வரவேண்டிய இடத்திற்குத்தான் வந்திருக்கிறாய். தாயிடத்தில் வந்தபிள்ளை இனி கவலை படவேண்டாம், சுடலையில் பிறந்தால் உனக்கு சுடலை என்று பெயரிட்டதாக சொன்னாய், நானும் உனக்கு பெயரிடுகிறேன், தேரின் அச்சை உடைத்ததால் உனக்கு தேரடிமாடன் என்று பெயரிடுகிறேன், உனக்கு தேரடியிலே ஒரு நிலையம், தெப்பக்குளத்தில் ஒரு நிலையம் , கொபுரத்திலே ஒரு நிலையம் , கொடிமரதிலே ஒரு நிலையம் போட்டு தருகிறேன், அது மட்டுமல்ல, எனக்கு இடது பக்கம் ஈசான மூலையில் தெற்குமேட்டுகலுங்கு திருவாத்தி மூட்டுக்குள்ளே ஏழு அண்டா திரவியம் தண்டயத்தில் அசையாது இருக்கிறது. அதை கள்வர்கள் கொண்டு செல்லாது மெய்க்காவல் காத்துவந்தால் உனக்கு வயிறார உணவு தருகிறேன் என்றார்.
அம்மை பகவதியின் மொழி கேட்ட சுடலையோ, அம்மா உன்னுடைய உணவு வேறு, என்னுடைய உணவு வேறு. உனக்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார் உனக்கு பூஜை செய்வதை இரு தினமாக நான் பார்க்கிறேன். உனக்கு ஒரு பித்தளை தாம்பாளத்தில் உப்பில்லாத பச்சரிசி சாதம் ஒரு கரண்டி வைத்து, ஒரு துணியை போட்டு மூடி, அதை, கணபதிகோயில் முதல் பைரவர் வரை அதையே படைக்கிறார். எனக்கு இந்த பூஜை போதாது, எனவே எனக்கு தனியாக ஒரு படப்பு போட்டு கொடு என்றார். அத்துடன், அந்த படப்பில் ஒரு நாளைக்கு ஒரு கோட்டை அரிசியை பொங்கி மூன்று உருண்டையாய் உருட்டி தரவேண்டும் என்றார். பகவதி அம்மையும் சரி என்று சம்மதிக்கவே, சுடலை ஆண்டவர் தன்னுடைய பூஜையை வாங்கிக்கொண்டு திரவியத்தை காத்து வருகிறார்.
அப்படியாக, கொஞ்ச நாளாக திரவியத்தை காத்து வருகிறார். ஆனால் சுடலையால் இருந்த இடத்தில அப்படியே இருக்க முடியவில்லை. அம்மை பகவதியை தரிசிக்க கோவிலுக்கு வருபவர்களில் யாரவது கெட்டவர்கள் மற்றும் துஷ்ட தனமானவர்கள் சுடலையின் பார்வையில் பட்டால், உடனே அவர்களை கொன்று தின்ன ஆரம்பித்தார். இதை தெரிந்துகொண்ட அம்மை வந்து தடுத்தாள், மகனே, கெட்டவர்கள் ஆனாலும் திருந்த வாய்ப்பு அளிக்கவேண்டும், அதற்காக இவளவு பெரிய கொலை தண்டனை கொடுக்க கூடாது, வேலியே பயிரை அளிக்க கூடாது, நீ காவல் தெய்வம், அதுவும் நம்மை வணங்க வருபவர்களை நாமே அடித்து கொல்லலாமா, தவறு செய்யாதே என்றார்.
அதற்கு சுடலை, அம்மா எனக்கு எல்லா நீதிகளும் தெரியும், எல்லா தர்மங்களும் தெரியும், நீ கொடுக்கும் தேங்காய் சில்லையும், பச்சரிசி சாதத்தையும் தின்று வயிறு நிறையவில்லை. நான் எவ்வளவு பசியில் இருந்தாலும் இங்கு வருபவர்களில் குணவன்களையும், நல்லவர்களையும் பார்க்கும்போது என் பசி மறந்து அவர்கள் என் பிள்ளைகளாக தெரிகின்றனர், அவர்களை, அவர்களுக்கு வரவிருக்கும் தீமைகளில் இருந்தும் துயரங்களில் இருந்தும் பிரித்து அவர்களை பாதுகாக்கிறேன். ஆனால், என்வயிறு நிறைந்து இருக்கும் போதும் கூட, துரோகிகளும் துஷ்ட தனமானவர்கள் என் கண்களில் பட்டாலே எனது வயிறு பசிஎடுத்து அவர்களை அழித்து தின்று விடுகிறேன். ஈசன் என்னை இப்படி படைத்தது விட்டார். நான் என்ன செய்வது என்றதுடன், அம்மையே உன்வருத்தம் எனக்கு புரிகிறது, ஆகையால், தினமும் உனக்கு மத்தியானம் உச்சிகால பூஜை நடக்கும்போது எனக்கு ஒரு சேவல் குடு, வெள்ளி கிழமையானால் ஒரு தீர்த்தம் வைத்து கொடு, மாதம் கடைசி செவ்வாய்க்கு ஒரு படுக்கை போட்டு குடு, வருடம் ஒரு தடவை உனது தேரோட்டத்துக்கு முன்னதா எனக்கு ஒரு ஊட்டு போட்டு குடு, அதன் பிறகு நான் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன் என்றார் சுடலை. பகவதி அம்மை சொன்னாள், அடேய் இது சிவகாம முறைப்படி பூஜை நடக்கும் திருத்தலம், இந்த சைவ பூஜையில் நீ இரத்தம் கேட்பது நியாயம் இல்லை, இஷ்டமானால் இரு, இல்லையெனில் இடத்தை காலிபண்ணு என்றார் அம்மை.
இனிமே இந்த அம்மாளிடம் அடங்கி போனால்தான் காரியம் நடக்கும் என்று எண்ணிய சுடலை, அம்மா நான் கேட்பதற்குரிய பலியை நீ கொடுக்க மறுத்தாலும், வெள்ளியும் செவ்வாயும் எனக்கு விடுமுறை கொடு, எனக்கு வேண்டிய உணவுகளை நான் மயானத்தில் சென்று தின்று வயிறை நிறைத்து கொள்வேன் என்றார் சுடலை. அதற்க்கு அம்மாளும் சரியென்று சம்மதித்தார். அன்றையிலிருந்து சுடலை வெள்ளியும் செவ்வாயும் மயான வேட்டை ஆடிவருவது வழக்கம். நாட்கள் கடக்கிறது.
அதே சமயம், அதே அந்த மலையாளத்தில், நந்தன் புனலூர் சலியர்கரை நான்கு சாலியர் தெருவிலே, அந்த காலத்தில் 1008 வீட்டு புலையன்மார்கள் வசித்து வந்தார்கள். இந்த புலையன்மார்களுக்கு எல்லாம் ஒரு தலைவன், அவன் பெயர் காளிப்புலையன். இவர்களின் தொழில் மாந்திரீக தொழில். அதுவும் சாதாரணப்பட்ட மாந்திரீகம் அல்ல, அந்த புலையன்கள், வானத்தையே வில்லாக வளைத்திடுவார்கள், மணலிலேயே கயிறு திரித்திடுவார்கள், அவர்கள் உரலுக்குள் மையை வைத்து அதை இந்த உலகமெல்லாம் சுற்ற விடுவார்கள், அது உலகமெல்லாம் சுற்றி வீட்டுக்கு வரும், அம்மிக்குள் மையை வைத்து அதை இந்த அகிலமெல்லாம் பறக்க வைப்பார்கள், அது அகிலமெல்லாம் பறந்து வீட்டுக்கு வரும், சுளவு தட்டியையும் தொண்ணூறு காதவெளிக்கு பரக்கவிடுவார்கள், அது ஒற்று பார்த்து வரும், கரையாத பொருட்களையும் கரைக்க வல்லவர்கள், கனத்த உருக்களையும் அளிக்க வல்லவர்கள். இந்த மந்திரவாதி காளிப்புலையனின் மனைவி காளிப்புலச்சி.
இரண்டுபேருக்கும் வெகு நாளாக குழந்தை இல்லாது போக, அவன் மனைவி காளிப்புலச்சி, நந்தன் புனலூரில் ஒரு பாதாள கண்டி ஈஸ்வரி என்ற ஒரு அம்மன் கோவில், அங்கு பொய் 48 நாள் ஒரு மண்டல காலம் விரதம் இருந்தாள். ஒரு காகமானது அக்கிரகாரதிலே, அவ்வையார் விரதமிருந்த ஒரு ஆச்சி வீட்டிலிருந்து ஒரு மா கொளுகட்டையை கொண்டுவந்து, கரமேந்தி தவசிருந்த காளிப்புலச்சி கையில் போட்டது, கோவிலில் கிடைத்தால் பிரசாதமாக நினைத்து அதை எடுத்து உண்டாள் காளிப்புலச்சி. அன்று முதல் அவள் கருவுற்று பத்தாவது மாதம் பெண் குழந்தை பிறந்தது. தவமிருந்து கிடைத்த குழந்தை ஆதலால் சந்தொசமுற்ற காளிப்புலையன், ஊர்மெச்ச விழா எடுத்து கொண்டாடினான், அவனுக்கு குலதெய்வம் இசக்கி. மாப்பிண்டதிலே அவதாரம் ஆனதால், இரண்டயும் இணைத்து மாவிசக்கி என்று குழந்தைக்கு பெயர் நாமம் சூட்டினான். அந்த குழந்தை இனிதே வாளர்ந்தது. ஐந்து வயதிலிருந்து அறிய கலைகளை படிக்கவைதான். பதிமூன்றாம் வயதிலே பருவமடைந்தாள் மாவிசக்கி. அவள் அழகை உவமானம் சொல்ல யாராலும் முடியாது. ஊரே மயங்கும் பேரழகு, மகளை பார்த்த காளிப்புலையன் யோசித்தான், நம் மகளின் அழகுக்கு நிகரான நகைகள் பூட்டி அவளை அலங்காரம் செய்ய ஆசைப்பட்டான், ஆனால், அவன் நியாயமான முறையிலே ஆசைப்பட வில்லை, அவனது மாந்திரீக புத்தி, அவனை கெடு வழியில் செல்ல தூண்டியது,
அஞ்சணமை என்று ஒரு மை, அதை கண்ணில் இட்டால் பூமியிலிருக்கும் புதையல் கூட புலப்ப்படுமாம். அந்த அஞ்சணமையை எடுத்து வெற்றிலையில் தடவி பார்க்கிறான், அங்கே, கொட்டாரக்கரை, பகவதி வாசல், தெற்குமேட்டுகலுங்கு, திருவாத்தி மூட்டுக்குள்ளே ஏழு அண்டா திரவியம் அசையாமல் இருக்ககிறது. அன்று வெள்ளிக்கிழமை ஆகையால் சுடலை மயான வேட்டைக்கு சென்று விட்டார். இதுதான் நல்ல தருணம், அந்த திரவியத்தை களவெடுத்து, வந்து மகளுக்கு நல்ல அணிகலன்கள் செய்ய வேண்டும் என்று மாந்த்ரீக சாலத்தோடு பெரும்புலையன் கிளம்புகிறான். மாந்த்ரீக வேலையோடு கொட்டாரக்கரை பகவதி வாசல் வந்து, ஏழு அண்டா திரவியத்தில், ஒரு அண்டாவை பெரும் புலையன் கொள்ளை போட்டு வீட்டுக்கு வந்தான்.
மயானம் போன சுடலை கலுங்குக்கு வந்தார், ஏழு அண்டா திரவியத்தில் ஒரு அண்டா காலியாக இருக்க கண்டார். பகவதியிடம் வந்தார் சுடலை, அம்மா நான் காவல் காத்த திரவியத்தை எவனோ களவெடுத்து சென்றுவிட்டான், யார் அவன், அவன் திசையை சொல்லு என்று கேட்டார் மாயாண்டி சுடலை. அதற்கு அம்மாள் சொன்னாள், மகனே திரவியம் போனாலும் போகட்டும், அவனை பற்றி கேளாதே என்றார். ஏனென்றால் அவன் காலனை விட கொடியவன், கொடிய பாவி அவன், மகனே, நந்தன் புனலூர் சலியர்கரை நான்கு சாலியர் தெருவிலே, 1008 வீட்டு புலையன்மார்கள் வசித்து வருகிறார்கள், அந்த புலையன்மார்களுக்கு எல்லாம் அவனே தலைவன், நமது திரவியத்தை களவெடுத்ததும் அவனே என்றாள் அம்மை. மேலும், பாம்பு கடித்து இறந்தார்கள் என்று யாரும் கண்டதே கிடையாது அவன் வாழும் தெருவிலே, தேள் கொட்டி அழுதவர்கள் அங்கு யாரும் இல்லை, அவர்களை எதிர்த்து சென்றவர்கள் திரும்பி வந்த சரித்திரமே இல்லை, அவளவு கொடிய மாந்திரவாதிகள் இருக்குமிடம், ஆகவே நீ போனால் உன்னையும் பிடித்து அடைத்து விடுவான், ஆகவே போக வேண்டாம் மகனே, போனது போகட்டும், நீ உள்ளே இரு என்றார் அம்மை. சுடலை கேட்கவில்லை, அம்மா, என்னுடைய காவலிலிருந்து ஒருவன் களவெடுத்து சென்ற பிறகும் நான் ஏனென்று கேட்க்காது இருப்பது முறையா. நீ ஒரு வார்த்தை சொல்லு. மகனே சுடலை சென்று வா, வென்று வா என்று ஒரு முறை ஆசி கொடுத்து அனுப்பு, வென்று வருகிறேன். எப்படி தெரியுமா ?
கொள்ளை கொண்டு சென்றவனை கொடியருத்து வாறேனம்மா, களவெடுத்து சென்றவனை கருவறுத்து வாறேனம்மா, மங்கவாய் வாயதிலே மண்ணள்ளி போட்டுவாரேன் எனக்கூறி, பலி வேகம் கொண்டு கொடும் சப்தமிட்டார். எல்லாம் கவனித்த அம்மாள் பார்த்தாள், இனி இவனை அடக்க முடியாது என்று உணர்ந்து, சென்று வா மகனே சென்று வா, புலையனை வென்று வா மகனே வென்று வா என்று வாழ்த்தி நல்ல விடை கொடுத்து, மந்திரித்த வல்லயத்தையும் கொடுத்து, திருநீறையும் கொடுத்து, சுடலையை, பகவதி அம்மையே அனுப்பி வைத்தாள்.
அங்கிருந்து வீர விகார வேசத்தோடு வந்த சுடலை அவன் வீடு நெருங்கியதும், யோசித்தார், இதற்கு அந்தப்புறம் நாம் இந்த சொருபத்தோடு செல்ல கூடாது. அந்த திருட்டு பயலை வேசம் போட்டுத்தான் மோசம பண்ணவேண்டும் என்று முடிவெடுத்தார். அதன் படியே ஒரு பாம்பாட்டி சித்தன் உருவம்பூண்டு, மகுடி எடுத்து ஊதினார், ஏகப்பட்ட பாம்புகள் வந்து கூடியது. அந்த ஆயிரம் பாம்பு கூட்டத்தில் ஒரு நாக பாம்பையும் ஒரு நல்ல பாம்பையும் பிடித்தார். பல தலை உடையதை நாகமென்றும், ஒரு தலை உடையததை நல்ல பாம்பு என்றும் சொல்வர். அந்த இரண்டு பாம்புகளையும் ஒரு கூடையில் அடைத்து, கூடையை தலை மேல் வைத்து, புலையர்களின் உயிரை கவரக்கூடிய ஒரு கூற்றுவனைபோல சுவாமி நடந்து வருகிறார். அப்படியே நான்கு சாலியர் தெருவை அடைந்த ஸ்வாமிகள், இங்குதான் பாம்பு வித்தை காட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். அப்படியே பாம்புகளை வெளியே எடுத்து , ஆட விட்டு பல கொடிய வேடிக்கைகளை செய்கிறார், அந்த வேடிக்கைகளை புலையன்மார்கள் பலர் வந்து பார்த்தாலும் காளிப்புலையன் வீட்டிலிருந்து எவரும் வரவில்லை. பார்த்தார் சுவாமி, வேடிக்கை காட்டுவது இப்போது முக்கியமில்லை, காளிப்புலையன் வரவில்லை என்றால் என்ன, நாமே அவன் இடத்திற்கு செல்வோம் என நினைத்த சுவாமிசுடலை, அந்த உருவை மாற்றி, ஒரு வயதான கிழவனைப்போல உருவெடுத்தார், அந்த உருவமானது, பழுத்த உடல் வெளுத்த தலையுமாகவும், உடலில் வெடித்த வெள்ளரி பழம் போன்ற வரிகளும், அந்த வரிகளில் வெள்ளி ஊசி போன்ற புழுக்களும் நெளிய, ஒரு வெறுக்கும் படியான உருவத்துடனும், காவி உடையோடு கழுத்திலே உத்திராட்சம், நெற்றியிலே விபூதி, ஒரு கையில் ஊன்றுகோல், மறு கையிலே திருவோடுமாக, தள்ளாடி தள்ளாடி, நடை நடந்து சுவாமி அந்த மாந்திரவாதியின் வீட்டு வடக்கு வாசலில் வந்து நின்றார்.
மாந்திரவாதி காளிப்புலையன் வீட்டில், அங்கு ஏழு அறைக்குள்ளே காளிப்புலையன் மகள் மாவிசக்கி தோளியர்களுடன் தன்னை தானே அலங்காரம் செய்து, அங்கு ஆடலும் பாடலுமாக மகிழ்ந்து கொண்டிருந்தாள். தாயும் தந்தையும் வெளியே சென்றிருந்தனர். உடனே சுவாமி வடக்கு வாசலில் நின்று பிச்சை கேட்பதுபோல, வீட்டில் யாரம்மா இருப்பது, ஒரு ஏழை ஆண்டி வந்திருக்கிறேன், கொஞ்சம் அன்னம் தாருங்கள் என்றார். அவளோ, யாசகம் கேட்பது சிவனடியார் என்று நினைத்து கையிலே கொஞ்சம் திணையை அள்ளிக்கொண்டு வந்தாள் மாவிசக்கி. இவள் வடக்கு வாசலில் வந்தால் சுவாமி தெற்கு வாசலில் நின்று, மீண்டும், அடியே பிட்சை போடு என்பார். மாவிசக்கி அங்கு சென்றால் உடனே அடுத்த வாசலுக்கு செல்வார். இப்படியே அவளை அலைக்கழித்தார். இதனால் கோபமடைந்த மாவிசக்கி சுடலையை பார்த்து, அடேய் கிளட்டுப்பயலே, மரியாதையாக தருவதை வாங்கிவிட்டு வீட்டைவிட்டு ஓடிவிடு என்று சத்தமிட, வந்தார் சுடலை, பெண்ணே நான் பிச்சைக்காக வந்தேன் என்று நினைத்தாயா, இல்லை, உனது அப்பனுக்கும் எனக்கும் ஒரு கணக்கிருக்கிறது, அதை முடிக்கவே நான் வந்தேன் என்று கூறி, மாரியாதை குறைவாக பேசினால் உன்னையும் இல்லாது அளித்திடுவேன் என்றார். அத்துடன், உன்னிடம் பேசி பேசி நாவறண்டு போனது கொஞ்சம் தண்ணீர் கொடு என்றார். அதற்க்கு மாவிசக்கி, அடேய் கிழவா நான் யாரென்று அறியாது பேசுகிறாய், அத்துடன், உனக்கு தர தண்ணீரும் இங்கு இல்லை, உனக்கு தண்ணீர் தரும்படியான இழிவான ஆட்களும் இங்கு இல்லை என்று அகங்காரமாக சொன்னாள். உடனே செஞ்சுடலை அவளை பார்த்து, அடி மாவிச்க்கி, உன் அப்பனுக்கு பசும பாலை கறந்து கொண்டு வந்து அலமாரியில் வைத்திருக்கிறாய், என்னிடமோ உனக்கு தர ஒன்றுமில்லை என்கிறாய், அது போக என்னை மிக இழிவாக பேசிவிட்டாய். கள்வனுக்கு பிறந்த நீயே இழிவானவள். ஆகவே இன்னும் எட்டு நாட்களுக்குள் உன்னை கன்னிகழித்து உன் அகங்காரத்தை அழித்து, அத்துடன், உன்னையும் உனது அப்பனையும் அவன் குடியையும் கருவறுத்து அளிப்பேன், இது தவறினால், நான் மயானத்தில் உருவெடுத்து கைலாசத்தில் வளரவும் இல்லை, என் தாய் பார்வதி தேவியாம் பேச்சியும் இல்லை, என்பெயர் சுடலையும் இல்லை என்று மார்தட்டி சபதம் வைத்த மாயாண்டி சுடலை மாயமாக மறைந்துவிட்டார்.
மாலை நேரம் சென்றதும் காளிப்புலையன் வீட்டிற்கு வந்தான். நடந்தது அனைத்தையும் சொன்னாள் மாவிசக்கி. அப்படியா என்வீட்டிலே வந்து ஒருவன் கருவருப்பானா, பார்கிறேன் நான் என்று கூறிய காளிப்புலையன், மை போட்டு பார்க்கிறான், சுடலை என்று அறிந்தான். திரவியதிற்கு காவல்காரன் வீடு தேடி வந்து விட்டான் இனி நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று புரிந்துகொண்ட காளிப்புலையன் காவலும் கட்டுமாக இருக்க, அதே அந்த மலையாளத்திலே ஆலடிப்புதூரிலே பளியன்மார்கள் எல்லாம் கூட்டு பங்காளியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் காக்காச்சி மலை தாண்டி கண்ணாடி சோலைக்குள்ளே, அக்காலத்திய முறைப்படி விவசாயம் செய்தார்கள். செய்த விவசாயம் அங்கே பயிரில் பலன் பிடிக்கும் நேரம். அதே நேரத்தில் சுடலை தான் போட்ட சபதத்தை முடிக்கவேண்டும் என்று, எட்டாம் நாள் சாமம், அந்த புலையனின் கோட்டைக்கு வந்தார். அங்கு ஏழு அறைக்குள்ளே எரும்ம்பு ரூபம் எடுத்து மாவிச்க்கியின் அறைக்குள்ளே நுழைந்து, மாவிசக்கியாளை கொண்ட கணவனைப்போல கூடவே படுத்திருந்து கற்பழித்தார், கற்பழித்து முடிந்ததும் வெளிப்பட்டார் சுடலை. அடுத்து நேராக, காக்காச்சி மலை கண்ணாடி சோலைக்குள்ளே மத யானை போல நுழைந்து அனைத்து பயிர்களையும் அடி முதல் வேர்வரை சர்வநாசம் செய்து அனைத்தயும் அழித்தார். அழித்துவிட்டு அப்படியே கொட்டாரக்கரை பகவதி வாசலுக்கு வந்தார்.
பளியன்மார்கள் மறுநாள் விவசாயத்தை பார்க்க வந்தார்கள். சோலையே அழிந்து போனது கண்டு திகைத்தவர்கள் புலையனிடம் ஓடிவந்தார்கள், நடந்ததை தெரிந்துகொண்ட புலையன், காரணம் கண்டுபிடிக்க மையிட்டு பார்த்தான், அங்கேயும் ஆடியது சுடலைதான் என்பதை கண்ண்டான். உடனே சுடலையை அடக்க என்ன வழி என்று அவனது மாந்திர சக்திவளியாக ஆராய்ந்து பார்க்கிறான். அவனது மாந்திர குறி சுடலை கேட்பதை கொடுத்தால் அவரை அடக்கலாம் என்று சொல்கிறது, சுடலையை அடக்கி அடைக்கவில்லை என்றால் பெரும் இழப்புக்கள் நேரும், ஆகையால், எப்படியாவது சுடலை கேட்பதை கொடுத்து அவரை அடக்கி நிலை கட்டநினைத்தான் புலையன். ஆகையால், மீண்டும் வெற்றிலையில் மை போட்டு சுடலையை அழைக்கிறான். மையில் சுடலைவந்தார். ஏய் கீழ் நெறி புலையனே, என்னை இப்போதுதான் அறிந்தாயா, நீ இல்லாததால், உன் மகளை கற்பழித்து, உன்னுடைய சோலை நடுவங்களையும் அளித்தது நான்தான், அடுத்து உன்னையும் அளிப்பேன் என்று வெறி கொண்டு சொன்னார். சுடலையின் சக்தி அறிந்து பயந்து போன புலையன், சுடலை எதை கேட்டாலும் அதைகொடுத்து அவரை எப்படியாவது அடக்க நினைத்து, என்ன நீ கேட்டாலும் தருகிறேன், உன் கோபம தீர நான் என்ன தரவேண்டும், எதை கேட்டாலும் தருகிறேன் என்றான். அதற்க்கு சுடலை, நீ யாருக்காக எனது கட்டு காவலை மீறி எனது அம்மையின் திரவியத்தை களவெடுத்தாயோ, அந்த மாவிசக்கியை கருவோடு கொடிபுடுங்கி எனக்கு காபூசை கொடுத்தால் உன் கட்டுக்குள் அகப்படுவேன், இல்லையென்றால் அடுத்து உன்னையும் அழிதிடுவேன் என்றார்.
எப்படியோ தான் தப்பினால் போதும் என்று எண்ணிய சிறு குணத்தான் புலையனவன், மாவிசக்கியை, அந்த காக்காச்சி மலை கண்ணாடி சோலைக்குள்ளே கொண்டு வைத்துக்கொண்டு, ஏழு பரண் போட்டு, ஏழுவிதமான பலிகளை கொடுத்தான். சுடலையோ, டேய் புலையனே சொன்னது போல உன் மகளை பழிபோட்டு கொடு இல்லையென்றால், நீ நினைத்தது நடக்காது என்று கர்ஜிக்க, தான் பெற்ற மகளென்றும் பாராமல் அந்த சண்டாளப்பாவி புலையன், சூல்கொண்ட ஒரு பசுவை கிடதுவதுபோல பரணின்மேல் கிடத்தி, கை கால்களை கட்டி, அவளது வயிற்றை கிழிக்க ஆயுதத்தை கையில் எடுத்தான்.
அப்போதுதான் தான் சாகப்போகிறோம் என்று மாவிச்க்கிக்கு தெரிந்தது. அட சண்டாளப்பாவி புலையனே, அருமை பெருமையாக வளர்த்து, எங்கோகண்ட பேய் படைக்கோ என்னை பலிகொடுக்க வந்துவிட்டாயே என்று அளுத்து புலம்பி பதறினாள். அவளின் பதரலை பார்த்த சுடலை, யாரும் அறியாது நொடி வேளையில் அவளின் மனதிற்குள் புகுந்து, பெண்ணே நீ முற்பிறவியில் செய்த பலன் படி இந்த கள்வனுக்கு மகளானாய், பெற்றோர் செய்யும் தவறுகளுக்கு பிள்ளைகளும் பதில் சொல்லவேண்டும், என் அம்மையின் பொருளென்று அறிந்தும் நீ அதை அனுபவிக்க துணிந்தாய், அதனால் இப்பிறவியிலும் தவரிளைத்தாய், ஆகவே எனது சட்டப்படி இவைகளுக்கு நான் வழங்கும் கூலி இதுவே என, நெறி புரிவித்து அதே நொடியில் வெளி வந்தார்.
வெளிவந்த சுடலை, டேய் வேளை தவறுகிறது என்று ஓங்கார சப்தமிட, தான் தப்பினால் போதும் என்று எண்ணிய புலையன், தான் பெற்ற மகளென்றும் பாராமல் மாவிசக்கியின் வயிற்றை கிழித்து, மாவோடு கருவோடு பிள்ளையை பிடுங்கி, தலைவாழை இலையில் வைத்து சுடலைக்கு வாரிக்கொடுத்தான். அதை ஏற்ற சுடலை அவன் சொல்லுக்கு கட்டுப்படுவது போல் அவன் சிமிளுக்குள்ளே நுழைந்தார். புலையன் சுடலையை சிமிழோடு ஒரு தாமிர தூருக்குள்ளே வைத்து குளத்திற்குள் புதைத்தான். அடுத்து அதே குளத்திற்கு புலையனின் மனைவி தண்ணீர் எடுக்க வந்தாள். தூரை வெடித்து சிமிழோடு வெளியான சுடலை புலையனின் மனைவியின் தண்ணீர் குடத்தினுள் சிமிளாக புகுந்து கொண்டார். குடம் வீட்டுக்குள் வந்ததும் குடத்திலிருந்து துள்ளி சிமிளாக வந்து அருகிலிருந்த புலையனின் இடது கால் தொடையில் அமர்ந்து கொண்ண்டார். பயந்து போன புலையன், இவன் நம்மை இன்னும் விட வில்லையே என்று நினைத்து, சிமிளை உரலில் இட்டு இரும்பு உலக்கையால் இடித்தான், சிமிழ் உடைந்து வெளிப்பட்ட தேரடிமாடன் மாயாண்டி சுடலை, வல்லயமும் தடியோடு வீர வேக உருவோடு நின்று, அந்த புலையனை ஒரே அடியாக அடித்து ஊட்டியை முறித்து உதிரத்தை குடித்து அவனை அளித்து, அவனது மனைவி காளிப்புலைச்சியையும் அளித்து, அந்த திரவியத்தை எடுத்து, பழையபடி கொட்டாரக்கரை, பகவதி வாசலுக்கு கொண்டு வந்து பகவதி அம்மையிடம் ஒப்படைத்தார்.
அம்மையிடம் ஆசிவாங்கி, மீண்டும் நம் நாட்டிலுள்ள எல்லா தீர்த்தங்களும் ஆடி, 1008 சிவ ஸ்தலங்கள், 108 திருப்பதிகளையும் மாயாண்டி சுடலை வணங்கி, எல்லா தெய்வங்களையும் தொழுத சுவாமி மாயாண்டி சுடலை ஆண்டவர், மீண்டும் தென்னாடு வந்து தென்நாட்டில் குற்றாலம் வழியாக சீவலப்பேரிக்கு வந்து சீவலப்பேரி சுடலையாக குடி கொண்டார். அங்கிருந்து பிடி மண் மூலம், வள்ளியூர் அருகே சிறுமளஞ்சியில் ஒத்தப்பனை சுடலை ஆண்டவராகவும், ஆறுமுகமங்கலத்தில் ஆறுமுகமங்கல சுடலையாகவும், மற்றும் தென் நாடு முழுக்க பல இடங்களில் சுடலை ஆண்டவன் பரந்து விரிந்து வீற்றிருந்து இன்று தன் ஆட்சியை நடத்தி வருகிறார். தன்னை நம்பிவரும் பக்தர்களுக்கு நல்லருள் அருள் பாலிக்கிறார்.
நல்லோர் மனதை நடுங்க செய்பவர்கள், நட்டாற்றில் கையை நழுவ விடுபவர்கள், வரவுபோக்கிற்கு வழி அடைப்பவர்கள், வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பவர்கள், கற்பு வழி நிற்கும் கன்னியரை அழிப்பவர்கள், பொது சொத்தை கொள்ளை அடிப்பவர்கள், பதவியை பயன்படுத்தி பகட்டு வேஷம் போடுபவர்கள் இன்னும் பல ஆயிரமாயிரம் நரித்தனம் செய்யும் நயவஞ்சக மனிதர்களை கழுவேற்றி காவுகொள்கிறார். கண்ணீருடன் சுடலையிடம் முறையிடுவர்களுக்காக இன்றும் துரோகிகளை பழிதீர்த்து நல்லவர்களை காப்பாற்றி வருகிறார். சுடலை ஆண்டவன் சன்னதியில் பொய் சத்தியம் செய்பவர்களின் குடும்பத்தின் தலைமுறையும் பூண்டற்று போய்விடும். தனக்கு ஓர் துயர் நேர்ந்துவிட்டது என்று கண்ணீருடன் எந்த அப்பாவியும் முறையிட்டால் சுடலை சும்மா விடமாட்டார் என்பது வெறும் கதையல்ல ரத்தவரிகளால் எழுதப்பட்ட சரித்திரமாக இன்றும் நிலைத்து நிற்கிறது. சுடலை ஆண்டவருக்கு ஜாதி பேதமின்றி யார் வேண்டு மென்றாலும் பூஜை செய்யலாம். அந்தணர்கள் உட்பட அனைத்து ஜாதியிலும் பூசாரிகள் உண்டு. பொதுவாக சுடலை நயவஞ்சகரை அழிப்பவராகவும் பொய் சத்யவாதியை வதைப்பவராகவும். தீய மந்திர சக்திகளை ஒழிப்பவராகவும் இருக்கிறார், பல எதிரிகளுக்கு ஆட்பட்டு வாழ்க்கையில் துயரப்படுபவர்கள் சுடலையை வணங்கினால் சத்ருகள் நாசமடைந்து சந்தோஷமான வாழ்வை பெறுவார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...